search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலினோடு தேர்தலுக்காக இணையவில்லை-திருமாவளவன் சொல்கிறார்
    X

    மு.க.ஸ்டாலினோடு தேர்தலுக்காக இணையவில்லை-திருமாவளவன் சொல்கிறார்

    • திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாத்து வருகிற மகத்தான பணியை மு.க.ஸ்டாலின் செய்கிறார்.
    • பெரியார், அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த ‘சமூகநீதி’ அரசியலை மு.க. ஸ்டாலின் வெற்றிகரமாக முன்னெடுத்து செய்கிறார்.

    தி.மு.க.வுடன் திருமாவளவன் இணைந்து இருப்பது தேர்தல் கணக்குப்போட்டு தான் என்று நினைத்தால் தப்பாம். பிறகு ஏன் அவர் இணைந்து இருக்கிறார் என்பதற்கு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திருமாவளவனே பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாத்து வருகிற மகத்தான பணியை மு.க.ஸ்டாலின் செய்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த 'சமூகநீதி' அரசியலை மு.க. ஸ்டாலின் வெற்றிகரமாக முன்னெடுத்து செய்கிறார். சமூக நீதிக்காகத்தான் எம்மைப்போன்றவர்கள் மு.க.ஸ்டாலினோடு கை கோர்த்து நிற்கிறோம். தேர்தலுக்காக அல்ல என்றார்.

    Next Story
    ×