என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும்.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×