search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    டிரைவரின் குழப்பத்தால் நிற்காமல் சென்ற மின்சார ரெயில்- அரக்கோணத்தில் பயணிகள் கடும் வாக்குவாதம்
    X

    டிரைவரின் குழப்பத்தால் நிற்காமல் சென்ற மின்சார ரெயில்- அரக்கோணத்தில் பயணிகள் கடும் வாக்குவாதம்

    • புளியமங்கலம் ரெயில் நிலையத்திற்கு சற்று கால தாமதமாக வந்த மின்சார ரெயில் நிற்பது போல் மெதுவாக ஓடியது.
    • ரெயில் பெட்டிகளின் இருக்கைகளில் பயணம் செய்தவர்கள் இறங்க முடியவில்லை.

    அரக்கோணம்:

    சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு இரவு 8.30 மணிக்கு வரும் மின்சார ரெயில் தினமும் அரக்கோணத்திற்கு முன்னால் உள்ள புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் இரவு 8.20 மணிக்கு நின்று, பயணிகளை ஏற்றிச் செல்லும்.

    அதன்படி நேற்று இரவு மின்சார ரெயில் ஒன்று சென்னையில் இருந்து, அரக்கோணம் செல்ல புறப்பட்டது. புளியமங்கலம் ரெயில் நிலையத்திற்கு சற்று கால தாமதமாக வந்த மின்சார ரெயில் நிற்பது போல் மெதுவாக ஓடியது.

    ரெயில் நிலையத்தை கடந்து நிற்காமல் சென்றது.

    அப்போது வாசற்படியில் இருந்தவர்கள் மட்டும் இறங்கினர். ரெயில் பெட்டிகளின் இருக்கைகளில் பயணம் செய்தவர்கள் இறங்க முடியவில்லை. அவசரமாக இறங்க முயன்ற பயணிகள் சுதாரித்துக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பயணிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

    இரவு 8.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்ததும், புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ரெயில் என்ஜின் முன்பு குவிந்தனர்.

    புளியமங்கலத்தில் ஏன் ரெயிலை நிறுத்தவில்லை?, இரவு நேரம் என்பதால் நாங்கள் எப்படி திரும்பிச் செல்வோம்? என ரெயிலை முற்றுகையிட்டு டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது டிரைவர் புளியமங்கலத்தில் நிறுத்தம் உள்ளதா? இல்லையா? என என குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயிலை நிறுத்த மறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து பயணிகள் ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.

    இரவு நேரத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண்கள், முதியவர்கள் என அனைவரும் சிரமத்துடன் பயணிகள் பஸ்சில் தங்கள் ஊருக்கு சென்றனர்.

    இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×