search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை
    X

    எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை

    • எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர்.
    • திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.

    முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது, அதிமுகவுக்கு சசிகலாவை தலைமை தாங்க வைக்கவும், திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.

    இதன் பின்னர், செய்தியாளர்களிடம் சசிலா பேசியதாவது:-

    அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது. அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக தொண்டர்களில் முடிவு அடிப்படையிலேயே எல்லாம் நடக்கும்.

    ஜெயலலிதா ஆட்சியில் பொங்கலுக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×