search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேங்கை வயலுக்காக வேங்கையான திருமாவளவன்
    X

    வேங்கை வயலுக்காக வேங்கையான திருமாவளவன்

    • குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையில் குற்றவாளியை கண்டுப்பிடிப்பதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் கொந்தளித்து விட்டார்.

    வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையில் குற்றவாளியை கண்டுப்பிடிப்பதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் கொந்தளித்து விட்டார்.

    குற்றவாளிகளை கண்டுபிடிக்க இத்தனை நாட்கள் என்று கெடு விதிக்க முடியாது. அரசை பொறுத்தவரை தலித்துகளுக்கு எதிராக இல்லை. யாரையும் காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட வில்லை. என்னைப்போய் தி.மு.க. காரர்கள் போல் பேசுகிறீர்களே என்று கேட்கிறீர்கள். இந்த மாதிரி எல்லாம் என்னிடம் வச்சிக்காதீங்க. இது நாகரீகம் இல்லாத பேச்சு. தி.மு.க.வை எதிர்த்து எங்களை போல் யாரும் போராட்டம் நடத்தியது உண்டா? கூட்டணியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டடங்களை நடத்தி இருக்கிறோம். புரிந்து கொள்ளுங்கள் என்றார். அப்போது ஒரு நிருபர். ஏன் இப்படி கையை நீட்டி ஆவேசப்படுகிறீர்கள் என்று கேட்டார். உடனே எதுங்க ஆவேசம், என்னை தி.மு.க.காரர் என்று கையை நீட்டி சொல்கிறார். நான் தி.மு.க. காரணா? உங்கள் முன் கையை நீட்டி பேசக்கூடாது என்றால் கையை கட்டிக்கொண்டு பேசனுமா? இல்லை குனிந்து நின்று பேச வேண்டுமா? என்று கொந்தளித்தார்.

    Next Story
    ×