என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கள்ளச்சாராய மரணங்களுக்கு பிற மாநிலங்கள் மீது பழி போட கூடாது- சுதாகர்ரெட்டி பேட்டி
- கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.
- கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.
ஒரு ஆண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோல் சம்பவம் நடந்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உள்துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கேட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு ஆதரவுடன் தமிழ்நாடு முழுதும் டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் குறைந்த விலை கள்ளச்சாராயத்தை மக்கள் நாடுவதால் இந்த மரணங்கள் நடந்துள்ளது.கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்புக்கு மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு நடவடிக்கைகளை கடுமையாக எடுக்க வேண்டும்.
அதை விடுத்து அடுத்த மாநில அரசுகள் மீதும் அண்டை மாநிலம் மீதும் பழி கூறி தப்பிக்க கூடாது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது மட்டும் போதாது. அவர்களது குடும்பத்திற்கு வேலை வாய்ப்பும் அளிக்க வேண்டும்.
கள்ளசாராய மரணங்களுக்கு தி.மு.க.வின் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாய் திறக்கவில்லை. நீட் விவகாரத்தை அரசியலாக்கி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்