search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
    X

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.
    • சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    சுமார் 20 நிமிட நேர சந்திப்புக்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கே: தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடருகிறதா?

    ப: தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன்.

    கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறதே?

    ப: இங்கு எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அமைதியாக எந்த சலசலப்பும் இல்லாமல், நீரோடை போகிற மாதிரி செல்கிறது.

    கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப: அவர்கள் உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.

    கே: வர இருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட வாய்ப்புள்ளதா?

    ப: அதுபற்றி நாங்கள் இன்னும் பேசவே இல்லை.

    கே: தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ் நாட்டின் எம்.பி. தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதா?

    ப: மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் நமக்கு 8 எம்.பி. குறையலாம். ம.பி., உ.பி. மாநிலங்களில் அதிகமாகக் கூடும்.

    அப்படி வரும்போது, இந்தியாவின் மொத்த வரைபடத்தில் நம்முடைய எண்ணிக்கை குறையும்போது, அதனுடைய விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாக இருக்கும்.

    இந்தியா என்கிற ஒரு அமைப்பு ஒரு நாடு இன்றைக்கு இருக்கக்கூடிய நினைப்பு போய்விடும். அதனுடைய விளைவுகள் எல்லா மாநிலங்களிலும் எதிர்விளைவுகள் ஏற்படும். மிகப்பெரிய சோதனையில் போய் முடியும்.

    கே: காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் உள்பட எல்லாருமே ஒன்று சேர்ந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?

    ப: சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் ரோட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    கே: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அங்கு அவமரியாதை செய்கிறார்களே?

    ப: நாம் அமைதியாக இருக்கிறோம். நம் பக்கம் நியாயம் இருக்கிறது. நம் பக்கம் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. அதனால் அமைதியாக இருக்கிறோம்.

    கே: 'இந்தியா' கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் தமிழ்நாட்டில் தொடருதா?

    ப: ஆமாம். கூட்டணியில் தொடருகிறோம்.

    கே: திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக கூட்டணியில் இருக்கிறார்களா?

    ப: எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    கே: திருமாவளவனுக்கு அ.தி.மு.க. தரப்பில் தூது விடுவதாக சொல்கிறார்களே?

    ப: அதுமாதிரி இல்லை. தமிழ்நாட்டை பொருத்தவரை இந்த கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×