என் மலர்
தமிழ்நாடு

TVK General Council Meet : புலி அமைதியாக இருக்கும்போது ஆடு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது - ஆதவ் அர்ஜுனா
- மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள்.
- தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
சென்னை:
சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகிவிட்டோம். பலமான உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மாநில அரசு மூட பார்த்தது.
டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள்.
அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம்.
மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள். தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம்.
என்ன சார் போராட்டம் நடத்துறாங்க? எல்லாம் நடிக்கிறாங்க! வெயிட் பண்ணுங்க... இன்னும் ரெண்டே மாசம்... உண்மையான போராட்டம்ன்னா என்னன்னு விஜய் காண்பிப்பார் என்றார்.