என் மலர்
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியை 'மாப்பிள்ளை' என சட்டமன்றத்தில் குறிப்பிட்ட அதிமுக MLA கருப்பண்ணன்
- சோலார் பேனல் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் பேசினார்.
- சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் "தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய அமைத்து வருகிறார்கள். அதில் EB கொள்திறன் 100 கிலோவால்ட் தான் அனுமதி வழங்குகிறார்கள். வெயில் காலங்களில் 100 கிலோவால்ட் போதுமானதாக இல்லை ஆகவே 120 கிலோவால்ட் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். இது மாப்பிள்ளைக்கு (செந்தில் பாலாஜி) தெரியும்" என்று பேசவே அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனையடுத்து, சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.
Next Story