search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள்-ராமதாஸ்
    X

    தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள்-ராமதாஸ்

    • மொழிக்கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ தேவையில்லை.
    • தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான லட்சினையில் 'ரூ' அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தமிழை இந்த அரசு தேடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அணு குமுறையை வைத்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது.

    தமிழை பயிற்றுமொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டில் முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்து அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்தது. இன்று வரை அதன் தமிழ் துரோகம் தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கையும் விரைவாக விசாரணைக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க எந்த நடவடிக்கையையும் இன்றைய அரசு மேற்கொள்ளவில்லை.

    உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×