என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பும் குறைவதுமாக இருந்து வருகிறது.
    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதாலும். கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரால் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகின்றன.

    கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது நீர்வரத்து வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில், கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்ட நீரால் நேற்று வரை வினாடிக்கு 2000 கன அடியாக இருந்தது.

    இந்த நிலையில் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் மெயின்அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    Next Story
    ×