என் மலர்
தமிழ்நாடு

தனிப்பட்ட பகையில் மதுரையில் காவலர் கொலை- இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பதில்
- தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் காவலர் கொலை தொடர்பாக அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
* சட்டசபையில் என்ன பேச போகிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சபாநாயகரிடம் கூற வேண்டும்.
* என்ன பிரச்சனை எழுப்பப் போகிறோம் என்பதை அ.தி.மு.க.வினர் சொல்லவில்லை.
* அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
* விதிகளை மீறி அ.தி.மு.க.வினர் பேச முற்பட்டனர்.
* அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை அவமரியாதை செய்தனர்.
* தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* காவலர் பணியில் இல்லாதபோது தனிப்பட்ட பகையில் மதுரையில் காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
* மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
* பொதுமக்கள் இடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.