என் மலர்
தமிழ்நாடு

காமராஜரை கலங்கப்படுத்துகிறார் அண்ணாமலை- அமைச்சர் சேகர்பாபு
- படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
- உப்பு சப்பில்லாத கூட்டத்தை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்த கூட்டுக்குழு கூட்டத்தை உப்புசப்பில்லாத கூட்டம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
படிக்காதோர் எப்படி பள்ளி பற்றி பேச முடியும் என்ற அண்ணாமலையின் கூற்று காமராஜரை கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது. படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
உப்பு சப்பில்லாத கூட்டத்தை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்றார்.
Next Story