என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சவுக்கு சங்கர் வீடு சூறை விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
    X

    சவுக்கு சங்கர் வீடு சூறை விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

    • தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.
    • பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.

    பின்னர், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×