என் மலர்
தமிழ்நாடு

செங்கோட்டையன் அ.தி.மு.க.வுக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்பார்- உதயகுமார், முனுசாமி

- எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது.
- தி.மு.க., அ.தி.மு.க.வின் பலத்தை குலைக்க சதி செய்து வருகிறது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரான செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். மறைவின்போது, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து அவருடன் பணியாற்றிய முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர். செங்கோட்டையன் கட்சியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர்.
அ.தி.மு.க.வில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதும் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பணியாற்றிய அவர், எந்த நேரத்திலும் அ.தி.மு.க. இயக்கத்திற்காக கடைசி வரையில் நிச்சயமாக உறுதுணையாக இருப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா கொடுத்த அதே மரியாதையை எடப்பாடி பழனிசாமியும் கொடுத்து வருகிறார்.
ஓ.பி.எஸ் நிபந்தனை இன்றி அ.தி.மு.க.வில் இணைய தயார் என்று கூறும் அதே நேரத்தில் மற்றொருபுறம் இரட்டை இலை சின்னத்தை கேவிட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார். இதில் என்ன இரட்டை மனநிலை இரட்டை நாக்கு என காட்டமாக கூறினார்.
மேலும் நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு விசாரிக்கலாம் என்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற, மாநிலங்கள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியினுடைய அதிகாரமிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் அ.தி.மு.க. சின்னம் குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை.
தேவையற்று சிலர் அவுளை மெல்லுவது போல் பேசக் கூடாது என்பதற்காக தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்தோம்.
மேலும் எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது என்றும் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி சட்ட முறைப்படி வெல்லுவார்.
தி.மு.க. ஏதாவது ஒரு வகையில் அ.தி.மு.க.வின் பலத்தை குறைக்கவும் ஒற்றுமையை குலைக்க சதி செய்து வருகின்றனர்.
இதேபோல் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால் கூட்டம் அதிகமாக சேரும் என்பதால் மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது என்பது முழுக்க முழுக்க அவரது பாதுகாப்புக்காக என்றால் அதில் எந்த கருத்தும் இல்லை, சந்தோசம். ஆனால் மாறாக சுயநலமாக பா.ஜ.க. அரசு அவரை தன் வசம் இழுத்துக் கொள்ளு மேயா னால் அது குறித்த கருத்துக் களை பா.ஜ.க.வின் வரலாற்றை திரும்பி பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
எந்த ஒரு மாற்று அரசியல் கட்சி தலைவர்களின் கருத் துக்களை பெற்று கட்சியை வழிநடத்தக் கூடிய இடத்தில் அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க. கட்சி விவகாரம் குறித்து ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் குறித்து மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உதயகுமாரும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. எனவே அவர் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்துவார்.
செங்கோட்டையன் பொறுத்தவரை அ.தி.மு.க.வில் மூத்த தலைவர். அவரை நாங்கள் அனை வரும் மதிக்கிறோம்" என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட பரவையில் நிரு பர்களுக்கு பேட்டியளிக்கையில், "அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமை யாக இருக்கிறோம்" என்று கூறினார்.
அ.தி.மு.க.வில் செங் கோட்டையன் எழுந்துள்ள சர்ச்சை நாளுக்கு நாள் அதிக ரித்து உள்ளது. அவர் அவர் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவர் அ.தி.மு.க. வை பாதிக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட மாட்டார் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.