என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேம்பாலம் அடியில் பிணமாக கிடந்த திருநம்பி அடித்து கொலையா?- போலீசார் விசாரணை
    X

    மேம்பாலம் அடியில் பிணமாக கிடந்த திருநம்பி அடித்து கொலையா?- போலீசார் விசாரணை

    • ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது.
    • போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சந்திரன்-கோவிந்தம்மாள் தம்பதியின் 22 வயதான அஞ்சலி என்கின்ற திருநம்பி சஞ்சய் என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாக இருந்தவள் ஆணாக மாறி வீட்டை விட்டு வெளியேறி ஆங்காங்கே சுற்றி திரிந்து வந்தது தெரியவந்தது. ஆடைகள் கலைந்து இருந்தது.

    இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருநம்பி அஞ்சலி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×