என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா - தனித்தீர்மானம் கொண்டுவந்தார் மு.க.ஸ்டாலின்
    X

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா - தனித்தீர்மானம் கொண்டுவந்தார் மு.க.ஸ்டாலின்

    • வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.
    • இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.

    தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம்.

    * வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.

    * வக்பு வாரிய சொத்துக்களை அரசு நிர்வகிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    * இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.

    * சட்டத்திருத்தம் நிறைவேறினால் அரசின் தலையீடு அதிக அளவில் இருக்கும்.

    * வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு இந்திய நாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×