search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபையில் நடந்தது என்ன?- வேல்முருகன் விளக்கம்
    X

    சட்டசபையில் நடந்தது என்ன?- வேல்முருகன் விளக்கம்

    • சேகர்பாபு பேசியதை கேட்டு முதல்வரும் தவறாக புரிந்து கொண்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
    • கவர்னர் வரும்போது பதாகை பிடித்து போராட்டம் செய்வது மட்டும் மரபா?

    சட்டசபையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    முதலமைச்சர் வேண்டுகோளை அடுத்து சட்டசபை உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனுக்கு சபாநாயகர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்ற பேச அனுமதி தாருங்கள் என கேட்டது தவறா?

    * நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே எனது வாய்ப்பை மறுக்கின்றனர்.

    * நான் சொல்ல வருவதை கேட்காமல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., அமைச்சர் சேகர்பாபு என அனைவரும் எழுந்து கத்துகின்றனர்.

    * அ.தி.மு.க.வினரை காப்பாற்றுவதற்காக தான் சேகர்பாபு என்னை குற்றம்சாட்டுகிறார்.

    * சேகர்பாபு பேசியதை கேட்டு முதல்வரும் தவறாக புரிந்து கொண்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

    * அதிகபிரசங்கித்தனமாக பேசுவதாக முதல்வர் என்னை கூறியது உண்மையில் எனக்கு வருத்தம் தருகிறது.

    * தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என சட்டசபையில் பேசினேன், அது தவறாக புரிந்து கொள்ளளப்பட்டுள்ளது.

    * எனது மாநிலத்தின் கோட்டாட்சியர், தாசில்தாராக வடநாட்டுக்காரனை நான் எப்படி ஏற்க முடியும்.

    * தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் என் உயிரை தியாகம் செய்வேன் என சபாநாயகர் முன் முழக்கமிட்டேன்.

    * கவர்னர் வரும்போது பதாகை பிடித்து போராட்டம் செய்வது மட்டும் மரபா?

    * தமிழுக்காக போராடும் என்னை தகராறு செய்வதாக கூறுகின்றனர்.

    * துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கோபம் வராதபோது சேகர்பாபுவுக்கு மட்டும் கோபம் வருவது ஏன்?

    * தெலுங்கானாவை சுட்டிக்காட்டி நான் பேச முயன்றபோது என்னை தவறாக புரிந்து கொண்டனர்.

    * எல்லாவற்றிற்கும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொள்கிறாய் என சேகர்பாபு ஒருமையில் பேசியதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

    Next Story
    ×