என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
- இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என உத்தரவு.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதேபோன்று இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறை முகங்களுக்கு செல்லவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் துறை முகங்களில் இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளது.
இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறை முகங்களுக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சகத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது துணிச்சலான வீரர்கள் போர்க்களத்தில் போராடுகிறார்கள்
- நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு.
பாதுகாப்பு அமைச்சராக, இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லபட்டதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற, சம்ஸ்க்ருதி ஜாக்ரன் மஹோத்சவத்தில் பேசிய ராஜ்நாத் சிங், "ஒரு தேசமாக, நமது துணிச்சலான வீரர்கள் இந்தியாவை உடல் ரீதியாகப் பாதுகாக்கிறார்கள், அதே நேரத்தில் நமது முனிவர்களும் ஞானிகளும் இந்தியாவை ஆன்மீக ரீதியாகப் பாதுகாக்கிறார்கள் ஒருபுறம், நமது துணிச்சலான வீரர்கள் போர்க்களத்தில் போராடுகிறார்கள், அதே நேரத்தில் நமது முனிவர்கள் வாழ்க்கை என்ற களத்தில் போராடுகிறார்கள்.
பாதுகாப்பு அமைச்சராக, நாட்டின் எல்லைகளையும், நமது வீரர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு.
பிரதமர் நரேந்திர மோடியின் பணி செய்யும் பாணி மற்றும் வலுவான உறுதிப்பாடு அனைவருக்கும் தெரியும். மக்கள் எதை விரும்பினாலும், அது மோடியின் தலைமையின் கீழ் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ராஜ்நாத் சிங் உடன் பாபா ராமதேவ் உள்ளிட்டோரும் மேடையை பகிர்ந்து கொண்டனர்.
- சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரும் அனைவரையும் "நகர்ப்புற நக்சல்கள்" என்று மோடி முத்திரை குத்தினார்.
- கொள்கையை தனது அரசு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள அவருக்கு நேர்மை இருக்குமா?
மத்திய அரசு 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்தார். முந்தைய காலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த பாஜக தற்போது தலைகீழாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சாதிவாரி கணக்கெடுப்பில் மோடியின் திடீர் தலைகீழ் மாற்றத்திற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. இங்கே மூன்று உதாரணங்கள் மட்டுமே -
1. கடந்த ஆண்டு, ஏப்ரல் 28, 2024 அன்று, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரும் அனைவரையும் "நகர்ப்புற நக்சல்கள்" என்று அவர் முத்திரை குத்தினார்.
2. ஜூலை 20, 2021 அன்று, மோடி அரசு பாராளுமன்றத்தில், "மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டி தவிர மற்ற சாதி வாரியான மக்கள்தொகையைக் கணக்கிட வேண்டாம் என்று கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
3. செப்டம்பர் 21, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரம்பிலிருந்து வேறு எந்த சாதி பற்றிய தகவல்களையும் கைவிடுவது மத்திய அரசால் எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவு" என்று மோடி அரசு தெளிவாகக் கூறியது.
உண்மையில், மோடி அரசு ஓ.பி.சி.க்களுக்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டாம் உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக வலியுறுத்தியது.
மோடிக்கு மூன்று கேள்விகள்:
1. கடந்த பதினொரு ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தனது கொள்கையை தனது அரசு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள அவருக்கு நேர்மை இருக்குமா?
2. அரசாங்கத்தின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணங்களை அவர் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் விளக்குவாரா?
3. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான காலக்கெடுவை அவர் நிர்ணயிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- பி.எம்.-21 சாதனங்களுக்குத் தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லை.
- உக்ரைனுக்கு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்துவிட்டது.
பாகிஸ்தானில் பீரங்கி வெடிமருந்துகளுக்குக் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, பாகிஸ்தான் நான்கு நாட்களுக்கு மேல் போரைத் தொடரும் நிலையில் இல்லை என்பது THERIYAVNATHULLATHU .
அவர்கள் தங்கள் ஆயுதங்கள் காட்சிக்காக அல்ல என்று வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், உண்மையான நிலைமை இதற்கு முற்றிலும் நேர்மாறாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்குத் தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை.
எம்.109 ஹவிட்ஜர்ஸ் ரக பீரங்கிகளுக்கு வேண்டிய எறிகுண்டுகளும், பி.எம்.-21 சாதனங்களுக்குத் தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லாத சூழலில் நிலவுகிறது.
உக்ரைனுக்கு அதிகளவில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விட்டதால், பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள் உள்ளன தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பீரங்கி வெடிமருந்துகளுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதும், காலாவதியான தொழில்நுட்பங்கள் காரணமாக பாகிஸ்தானிய ஆயுத தொழிற்சாலைகள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இயலாமையும் அங்கு பீரங்கி வெடிமருந்துகளின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியாவுடன் நீண்டகாலப் போரை நடத்துவதற்கு பாகிஸ்தானிடம் நிதி மற்றும் இராணுவ வளங்கள் இல்லை என்று முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக இறக்குமதி செய்தது.
- இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது.
அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக ராணுவம் இந்த குறுகிய தூர தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்தது.
சில வாரங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏவுகணைகள் எல்லைக்கு கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது..
ராணுவம் மொத்தம் ரூ. 260 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஏவுகணைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்லா-எஸ் என்பது இந்தியாவிடம் ஏற்கனவே உள்ள இக்லா ஏவுகணைகளின் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும்.
- நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.
- சசிகுமார், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் உடன் என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.
சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அவர்களின் குடும்பம் பற்றியும், இவர்களின் குடும்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இக்கதைக்களம் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.
அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.
படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை..இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.
படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது
- 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.
கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.
கடைசி வரை மூச்சைப் பிடித்து ஆடிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்த ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைத் தழுவியது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
- 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.
ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.
முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது.
இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்கிறது.
மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்த சீசனில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
- மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.
- ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர்.
சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது நாவலடி என்கிற பிரபல தனியார் ஓட்டல்.
இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்ட உணவில் முழு தேரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.
இதையடுத்து, உணவு சாப்பிட்டவர்கள் நாவலடி ஓட்டல் நிர்வாகத்திடம் தேரை குறித்து கேட்டனர். அப்போது, வாடிக்கையாளருக்கும், ஓட்டலர் நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாவலடி ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- கலந்துரையிடலில் பங்கேற்ற சீக்கிய இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
- 1980களில் நடந்தது தவறு என்று நான் பகிரங்கமாகக் கூறியுள்ளேன்.
முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகளின் போது நிகழ்ந்த ஒவ்வொரு தவறுக்கும் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில், ராகுல் காந்தி பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கலந்துரையாடலில் பங்கேற்ற சீக்கிய இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் 1984ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ஆபரேஷன் புளுஸ்டாரின் கீழ் பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தவறுகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல நான் இல்லாத (பிறக்காத) போது நடந்தன.
ஆனால் காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்றில் இதுவரை செய்த தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 1980களில் நடந்தது தவறு என்று நான் பகிரங்கமாகக் கூறியுள்ளேன். நான் பலமுறை பொற்கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். சீக்கிய சமூகத்துடன் எனக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது.
பாஜக குறித்து சீக்கியர்களிடையே நான் பயத்தை உருவாக்குவதாக நீங்கள் சொன்னீர்கள். சீக்கியர்களை எதுவும் பயமுறுத்தும் என நான் நினைக்கவில்லை. மக்கள் தங்கள் மதத்தை வெளிப்படுத்துவதற்குச் சங்கடமாக இருக்கும் ஒரு இந்தியாவை நாம் விரும்புகிறோமா? என்றே நான் வினவினேன் என்று தெரிவித்தார்.
- அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
- அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா இங்கிலீஸ் மீடியம் பள்ளியில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
சமீபத்தில், அவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதினார். சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எல்லா படங்களிலும் ஃபெயில் ஆன அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
இருப்பினும், அபிஷேக் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு, அவரது பெற்றோர் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக்கை வெட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், 'நீ தேர்வில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது" என்று ஊக்கப்படுத்தினர்.
பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார். 'நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் தேர்வு எழுதுவேன். நான் தேர்வில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன்" என்று அபிஷேக் ஊடகத்திடம் தெரிவித்தார்.
- சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.
இதனால், சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.