search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹோண்டுராஸ் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் - 12 பேர் உயிரிழந்ததால் சோகம்
    X

    ஹோண்டுராஸ் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் - 12 பேர் உயிரிழந்ததால் சோகம்

    • ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • ஹோண்டுரான் சிவில் ஏரோநாட்டிக்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    ஹோண்டுராஸ் கடற்கரையில் ஒரு சிறிய வணிக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த திங்கள் கிழமை இரவு ரோட்டன் தீவில் இருந்து லா சீபாவின் பிரதான நிலப்பகுதிக்கு செல்லும் வழியில் லான்சா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்தது. அதில் 17 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர், அவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விமானம் முழு உயரத்தை அடையத் தவறிவிட்டதாகவும், கடலில் விழுந்ததும் விரைவாக மூழ்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மீனவர்கள் உயிர் பிழைத்தவர்களை மீட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹோண்டுரான் சிவில் ஏரோநாட்டிக்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், ஆப்பிரிக்க மற்றும் பூர்வீக இனக்குழுவைச் சேர்ந்தவருமான ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோவும் ஒருவர். மார்டினெஸ் சுவாசோ அமெரிக்க குடியுரிமையையும் பெற்றிருந்தார். அவரது பிரதிநிதியான பிரெஞ்சு குடிமகனான ஹெலீன் ஓடில் குய்வார்ச், உயிர் பிழைத்தவர்களில் ஒருவர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் ரோட்டனில் இருந்து சான் பெட்ரோ சூலாவில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    Next Story
    ×