என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![பாகிஸ்தானில் பழங்குடியினர் கடும் மோதல்- 16 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் பழங்குடியினர் கடும் மோதல்- 16 பேர் உயிரிழப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/16/1882530-clash.webp)
பாகிஸ்தானில் பழங்குடியினர் கடும் மோதல்- 16 பேர் உயிரிழப்பு
![Murugesan Murugesan](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மோதலையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- டாரா ஆதம் கேல் பகுதியில் பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் டாரா ஆதம் ஹெல் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கம் தங்களுக்கு தான் சொந்தம் என்று அதே பகுதியில் வசிக்கும் இரு தரப்பு பழங்குடியின மக்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டும் வந்தது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பழங்குடியின சமுகத்தினர் இடையே நேற்று இரவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டாரா ஆதம் கேல் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ளது, இங்கு பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது. இப்பகுதி, 2018 இல் கைபர் பாக்துன்க்வாவுடன் இணைக்கப்பட்ட பழங்குடிப் பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது...