search icon
என் மலர்tooltip icon

    டென்மார்க்

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி, மலேசியாவின் பேர்லி டான் மற்றும் முரளிதரன் தினா ஜோடியுடம் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-19, 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

    இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, கனடாவின் கெவின் லீ மற்றும் எலியானா ஜாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 22-20, 19-21, 22-24 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபே வீராங்கனையான பை யூ போ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-8 என பிவி சிந்து வென்றார். இரண்டாவது செட்டில் 13-7 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சீன தைபே வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வி அடைந்தார்.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் காங்சு உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-12 என வென்ற லக்ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் குயென் உடன் மோதினார். இதில் மாளவிகா 13-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்து வீராங்கனையிடம் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    • விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர்.
    • இச்சம்பவத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

    நார்வே நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர். இதனால் விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டனர்.

    இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், 'பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது' எனவும் உறுதியளித்துள்ளது.

    • டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg].
    • இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம்.

     டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல பியர் மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg]. இந்நிறுவனத்தின் பார்ட்நர்ஷிப்பில் இந்தியாவில் CSAPL நிறுவனமும் நேபாள நாட்டில் கூர்க்கா ப்ரியூயரி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த இரண்டு பார்ட்நர்ஷிப் நிறுவனங்களையும் 744 மில்லியன் டாலர்களுக்கு [ரூ.6,234 கோடிக்கு] விலைக்கு வாங்க கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் முன்வந்துள்ளது.

     

    இதன்படி CSAPL நிறுவனத்தில் ஏற்கனவே அதிக பங்குகளை வைத்துள்ள கார்ல்ஸ்பெர்க், அதில் மீதமுள்ள 33.33% பங்குகளையும் தற்போது வாங்க உள்ளது. மேலும் நேபாள நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கார்ல்ஸ்பெர்க் வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி விரைவில் இந்த இரண்டு நிறுவனமும் கார்ல்ஸ்பெர்க் நிர்வாகத்தின் கீழ் செல்கிறது.

     

    ஆசியாவில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் வலுவாகக் காலூன்ற இது ஒரு வரலாற்று நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம். 

    • பொது வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
    • இதை சற்றும் எதிர்பாராத அவர், இந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்தார்.

    டென்மார்க் பிரதமராக மேட் ஃப்ரெடெரிக்சன் இருந்து வருகிறார். இவர் டென்மார்க்கின் மத்திய கோபென்ஹாகென்னில் சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். உடனே அந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என பிரதமர் அலுவலம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக டென்மார்க் போலீஸ், பிரதமரை தாக்கிய நபரை கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

    இந்த சம்பவத்தில் பிரதமர் சற்று அழுத்தத்துடன் இருந்தார். பின்னர் பாதுகாப்பு வளையத்துடன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய யூனியன் தேர்தல் டென்மார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஸ்லோவாகிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி.
    • விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.

    பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் கூறியிருந்தார்.

    மேலும், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

    அதன்படி, டென்மார்க்கில் இன்று முதல் முறையாக பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

    பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சியில், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன்கள் சார்ல்ஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.

    விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.

    காசி ஆனந்தன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.
    • பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம்.

    பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.

    பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம்.

    பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

     பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது.

    விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 39 வயதான புஸ்கோவ் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
    • கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

    இப்படி எல்லாம் கூட சாதனை படைக்க முடியுமா? என வியக்க வைக்கிறார்கள் சிலர். அந்த வகையில் டென்மார்க்கை சேர்ந்த பீட்டர் வான் டாங்கன் புஸ்கோவ் வித்தியாசமான முறையில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

    39 வயதான அவர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு மிகப்பெரிய நாசி மற்றும் மிகவும் நீளமான தோல் உள்ளது. அது எனக்கு சாதனை படைக்க உதவியது என்று நம்புகிறேன் என கூறி உள்ளார்.

    கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சிறு வயதில் கூட மூக்கில் பொருட்களை செருகும் ஆசை தனக்கு இருந்ததில்லை என கூறும் புஸ்கோவ் தற்போது சாதனைக்காக இந்த சவாலை ஏற்றதாக கூறினார். மேலும் நான் எப்போதும் வாழ்க்கையின் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான அம்சங்களை தேட முயற்சிப்பேன் என்றார்.

    • 3-வார பயணதிட்டத்திற்கு ரூ.30 லட்சம் வரை பெறப்படுகிறது
    • நுட் ராஸ்முசென் எனும் உதவி கப்பல் பயணத்தை தொடங்கி விட்டது

    டென்மார்க் நாட்டை சேர்ந்த சன்ஸ்டோன் குழுவிற்கு சொந்தமானது ஓஷன் எக்ஸ்ப்லோரர் எனும் சொகுசு கப்பல். இது 2021-ல் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பல், உலகில் உள்ள மனிதர்கள் அதிகம் வசிக்காத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்ப்லோரர் கப்பல் சுமார் 205 பேருடன் கிரீன்லேண்டு நாட்டை நோக்கி செப்டம்பர் 1 அன்று 3-வார பயண திட்டத்துடன் புறப்பட்டு சென்றது. வரும் 22-ம் தேதியன்று பயணத்தை முடித்து கொண்டு மீண்டும் திரும்ப இருந்தது. இப்பயணத்திற்கு பயணக்கட்டணமாக சுமார் ரூ.30 லட்சம் வரை பெறப்படுகிறது.

    இந்நிலையில், 3 தினங்களுக்கு முன் கிரீன்லேண்டு நாட்டின் வடகிழக்கு கடற்பகுதியில் உள்ள அல்பெஃப்ஜோர்ட் எனும் இடத்தில் அக்கப்பல் தரைதட்டியது. அக்கப்பலுக்கு உதவி செய்வதற்காக நுட் ராஸ்முசென் எனும் ஒரு கப்பல் புறப்பட தொடங்கி பயணிக்கிறது.

    தரைதட்டி நிற்கும் அக்கப்பலில் பல வயதான பயணிகள் உள்ளனர் என்பதும் அவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் பயணிகளின் உறவினர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது. ஆனால் கப்பலிலேயே ஒரு மருத்துவர் உள்ளார் என்பது சற்று ஆறுதலான செய்தி.

    பயணிகள், நகராமல் நிற்கும் அக்கப்பலிலிருந்து, தொலைவில் தெரியும் பனிமலைகளை கண்டு ரசித்து, நேரத்தை கழித்து, தங்களை உற்சாகமாக வைத்து கொள்வதாக அக்கப்பலில் இருந்து அவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

    ஆர்க்டிக் பகுதியில் டென்மார்க் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் "ஜாயிண்ட் ஆர்க்டிக் கமாண்ட்" படையினர் நிலைமையை கூர்ந்து கவனித்து மீட்பு பணியையும் நிர்வகித்து வருகின்றனர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    கோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

    இதில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார்.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியது.

    கோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூர் வீரர் கென் லோ யூவுடன் மோதினார்.

    இதில் பிரனாய் 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 3வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    ×