search icon
என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை ஏற்று 75,000 அரசு ஊழியர்கள் வெளியேற சம்மதித்துள்ளனர்.
    • அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    அமெரிக்க அரசு நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார்.

    அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டும் வேலையை DODGE செய்து வருகிறது. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் அதிரடியாக முடக்கினார் டிரம்ப்.

    இந்த நிலையில்தான் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

    அந்த வகையில் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாகவும், அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இதுவரை, வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு Probation காலத்தில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கத்துக்கு இலக்காகி உள்ளனர். சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிநீக்கத்துக்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையங்களில் உள்ள Probation ஊழியர்களில் பாதி பேர் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தித் துறையில் சுமார் 1,200 முதல் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 325 ஊழியர்களும் அடங்குவர்.

    அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில் தேசிய பூங்காக்கள் சேவை நிறுவனம், சுமார் 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

     

    வரிகளை வசூலிக்கும் உள்நாட்டு வருவாய் சேவை நிறுவனம், அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பருவகால தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதையும், காடுகளில் இருந்து காய்ந்த மரம் போன்ற தீபற்றும் ஆபத்து கொண்டவற்றை அகற்றும் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மேலும் வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை டிரம்ப் மற்றும் மஸ்க் அறிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு வெளியேற 75,000 அரசு ஊழியர்கள் சம்மதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பணிநீக்கத்துக்கு எதிராக பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    • இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் இறந்தார்.
    • 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்

    உலக பணக்காரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது 'வைட் அவேக் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்ற எரோல் மஸ்க் பேசியதாவது, ஒபாமா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் பெண்ணாக உடையணிந்த ஒரு ஆணை மணந்தார் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோசுவா ரூபின் உடனே, "மிஷெல் ஒபாமா ஒரு ஆண் தானா?" என்று கேட்டபோது, எரோல், "நிச்சயமாக, அது உங்களுக்குத் தெரியாதா?" என்று பதிலளித்தார்.

    மேலும் 2014 ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ், மிச்செல் ஒபாமாவை திருநங்கை என்றும், பராக் ஒபாமா 'ஒரு ஓரினச்சேர்க்கையாளர்' என்றும் பேசியிருந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் செப்டம்பர் 4, 2014 அன்று இறந்தார்.

    இதை குறிப்பிட்டு பேசிய எரோல் மஸ்க், "ஜான் ரிவர்ஸ் அதைப் பற்றிப் பகிரங்கமாகக் பேசினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்துகிடந்தார். அவர்கள் அவரை வெட்டிக் கொன்றார்கள்" என்று கூறினார்.

     

    மேலும் " நிச்சயமாக மிஷேல் ஒபாமா ஒரு ஆண்தான். 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்" என்று எரோல் மஸ்க் தெரிவித்தார். 

    • ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
    • ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

    இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்தது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் ப்ரொபசலை ஓபன்ஏஐ நிறுவனம் நிராகரித்துள்ளது. OpenAI விற்பனைக்கு இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார். 

    இதனிடையே எலான் மஸ்க்கின் கோரிக்கை தொடர்பாக ஓபன்ஏஐ சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று கிண்டலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
    • நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது.

    தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்திருந்தது.

    இந்நிலையில், வெண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர். அதில், "நாசாவின் க்ரூ-10 விண்கலம் மார்ச் 12 ஆம் தேதி பூமியில் இருந்து ஏவப்படும் என்றும் மார்ச் 19 ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்தனர்.

    நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு (வயது 88) திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வாடிகனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேல் சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    இதுகுறித்து வாடிகன் கூறும்போது,

    போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆனால், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

    • இந்தியா தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்தார்.
    • நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல.

    இந்தியாவில் இருந்து ஏஐ மாநாட்டிக்கு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று நேற்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.  

    வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    இதற்கிடையே இந்தியாதான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தி உள்ளார். இது இந்தியா மீது வரிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    மேலும் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால் டிரம்ப் சந்திப்பின்போது, சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவதாக மோடி கூறியுள்ளார்.

     

    இதற்கிடையே மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது டிரம்ப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

    அதற்குப் பதிலளித்த டிரம்ப், "நீங்கள் சத்தமாகப் பேச வேண்டும். அவர் சொல்வதில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. அது அவரின் உச்சரிப்பு(ascent). எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்று கூறி அவரின் கேள்வியைத் தட்டிக் கழித்தார்.

    மற்றொரு இந்திய நிருபர், அமெரிக்காவில் செய்லபடும் குருபத்வந்த் சிங் பண்ணுனை மேற்கோள் காட்டி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனையில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுமா என்று கேட்டார்.

    மேலும் இந்தியத் தொழிலதிபர்கள்(அதானி) மீது முந்தைய பைடன் அரசின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த கருத்தையும் கேட்டார்.

    இதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் டிரம்ப், பைடன் நிர்வாகத்துடன் இந்தியாவுக்கு நல்ல உறவு இல்லை என்று சுற்றிவளைத்துக் கூறினார்.

    அதானி மீது வழக்குபதிவு செய்யப்பட்டவெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் (FCPA) சட்டத்தை டிரம்ப் நேற்று முன் தினம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

     

    நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ஆப்கனிஸ்தான் பெண் நிருபர் ஒருவர், அமெரிக்கா மீண்டும் ஆப்கனிஸ்தான் தாலிபான் அரசில் தலையிட்டு, அங்கு பெண்கள் மீது நிகழும் தீவிர அடக்குமுறையைத்  தடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

    முன் வரிசையில் நின்று அவர் தெளிவாக கேள்வி எழுப்பியபோதும் அவர் கூறுவது தனக்கு புரியவில்லை என அதை டிரம்ப் தட்டிக் கழித்தார். இது குறித்து பல நிருபர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 

    • தொழிலதிபர் விவேக் ராமசாமியை பிரதமர் மோடி சந்தித்தார்.
    • அதிபர் டிரம்புடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    இந்தியாவில் இருந்து இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். கடந்த புதன்கிழமை பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். முன்னதாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

    அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    அப்போது, பல முக்கியமான துறைகளில் தங்கள் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இரு தரப்பினரும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவிவில், அதிபர் டிரம்புடன் "சிறந்த" சந்திப்பை நடத்தியதாகவும், அவர்களின் பேச்சுவார்த்தை "இந்திய-அமெரிக்க நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை சேர்க்கும்" என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    "அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி MAGA பற்றிப் பேசுகிறார். இந்தியாவில், நாங்கள் ஒரு விக்சித் பாரதத்தை நோக்கிச் செயல்படுகிறோம். இது அமெரிக்க சூழலில் MIGA என மொழி பெயர்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா ஒன்றாக செழிப்புக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளன!" என்று மோடி எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

    மோடியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விநியோகங்களை அதிகரிக்கும் நோக்கில், வாஷிங்டன் புது தில்லிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

    • அதிபர் டிரம்ப் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
    • அதிபர் டிரம்ப் தனித்தனியாக பேசியிருந்தார்.

    அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கவில்லை என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்ப் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.

    இது குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நான் ஏற்கனவே அதிபர் விளாடிமிர் புதினிடம் கூறியுள்ளேன். அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்" என்று கூறினார்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் பேசியிருந்தார். இதன் பிறகு பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    அதிபர் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதில் இருந்து, 2022 உக்ரைன் படையெடுப்பு குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் உரையாடியதாக அமெரிக்க அதிபர் கூறினார். மேலும் அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் "ஒரு பகுதியாக" இருக்கும் என்றும், ரஷிய அதிபர் புதின் "சமாதானத்தை விரும்புகிறார்" என்று தான் உறுதியாக நம்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் இது "போரின் சகாப்தம் அல்ல, உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின்" சகாப்தம் என்று வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து, பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் பலமுறை பேசியுள்ளார்.

    கடந்த ஆண்டு இரு தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    • எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    • அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டார்.

    மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் (26/11) ஈடுபட்டு, இந்தியாவில் தேடப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டவரான ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 26/11 தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடையவர் என்று அறியப்படுகிறது.

    அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    இது குறித்து பேசிய அவர், "மும்பை கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக செயல்பட்டவனும், உலகின் மிகவும் மோசமான நபரை இந்தியாவில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்து இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அவர் இந்தியாவுக்கு சென்று நீதியை எதிர்கொள்ள இருக்கிறார்," என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    • மோடி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

    வாஷிங்டன்:

    பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி அதிபர் டிரம்பை இன்று சந்தித்துப் பேசினார்.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தச் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது:

    இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்.

    பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வர்த்தகம் தொடர்பாக நாங்கள் பேச இருக்கிறோம். பல விஷயங்கள் பற்றி பேச இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    • 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.

    வாஷிங்டன்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    இந்நிலையில், அதிபர் டிரம்பை சந்தித்தபோது பிரதமர் மோடி கூறியதாவது:

    நான் இந்த அறைக்குள் நுழைந்தவுடனே அகமதாபாத் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம், நாங்கள் பெரிய பேரணி நடத்தியதும், அகமதாபாத்தில் நமஸ்தே ட்ரம்ப், ஹவுடி மோடி ஹூஸ்டனில் செய்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

    உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்.

    இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர். நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம்.

    எங்கள் உறவை இன்னும் விரிவானதாக ஆக்குவதற்கும், எங்கள் உறவில் மேலும் உயரங்களை அடைவதற்கும் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தீர்கள்.

    அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்காவின் தேசிய நலனை உச்சமாக வைத்திருப்பதை பாராட்டுகிறேன். அதிபர் டிரம்பை போலவே இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

    உங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில் நாங்கள் இன்னும் அதிக வேகத்துடன் வேலை செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    எனது மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று முறை வேகத்துடன் செயல்படுவோம் என இந்திய மக்களுக்கு நான் உறுதியளித்தது போல், அடுத்த 4 ஆண்டுகளில், அதிபர் டிரம்ப்புடன், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், அவரது முதல் பதவிக்காலத்தை விட இரு மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
    • வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அங்குள்ள மெர்சைல் நகரில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். அப்போது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக பிரதமர் மோடி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×