என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வேட்பாளரை இறுதி செய்யவில்லை: மேலிட பொறுப்பாளர் சுரானா பேட்டி
- பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது.
- தேசிய கூட்டணி கட்சி தலைவர் ரங்கசாமி பா.ஜனதா போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது. நாட்டின் அனைத்து தொகுதிக்கும் மத்திய மந்திரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை நடந்துள்ள தேர்தல் ஏற்பாடுகள்? மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மத்திய மந்திரி புதுவைக்கு வந்துள்ளார்.
தேசிய கூட்டணி கட்சி தலைவர் ரங்கசாமி பா.ஜனதா போட்டியிடும் என அறிவித்துள்ளார். தாமரை சின்னத்தில்தான் நிற்கப்போவதையும் உறுதிபடுத்தியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரிடம், வெளியூரை சேர்ந்தவரா? மண்ணின் மைந்தரா? யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்? என நிருபர்கள் கேட்டபோது, முதல்கட்ட கூட்டம்தான் நடந்துள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை முன்னிறுத்தும் திட்டம் இப்போது வரை இல்லை என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்