என் மலர்
புதுச்சேரி

கருடா உயிரியல் பூங்காவை முதல்-ரங்கசாமி திறந்து வைத்த காட்சி. அருகில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உள்ளார்.
கருடா உயிரியல் பூங்கா
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் ஊசுட்டேரி அருகே உள்ள போகோ லேண்ட் வளாகத் தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கருடா என்ற பெயரில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டு உள் ளது.
- விழாவுக்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் ஊசுட்டேரி அருகே உள்ள போகோ லேண்ட் வளாகத் தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கருடா என்ற பெயரில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டு உள் ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு உயிரியல் பூங்காவை திறந்து வைத்து, அங்குள்ள பறவைகள், விலங்குகளை பார்வை யிட்டார்.
விழாவில் முன்னாள் சபாநாயகர் சபாபதி, ஆச்சாரியா கல்விக்குழும தலைவர் அரவிந்தன், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 'குழந்தைகளை கவரும் வகையில் அரிய வகை சிறிய விலங்குகள், பறவைகள், வண்ண மீன்கள், பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவை உள்ளன. சிறப்பம் சங்களாக குதிரை, ஒட்டகம், நெருப்புக்கோழி, பஞ்சவர்ண கிளி வகைகள், வெளிநாட்டு புறாக்கள், நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் வண்ண வாத்துகள், பலவகையான கோழிகள், முயல், ஆமை உள்ளிட்டவைகளும் உள்ளன.