என் மலர்
ரஷ்யா
- கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர்
- உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியா 12,000 வீரர்கள் வரை அனுப்பி வைத்ததாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் கூறின. இந்நிலையில் போரில் அதிக எண்ணிக்கையிலான வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர். அங்கு தாங்கள் நடத்தும் தாக்குதல்களில் சுமார் 3000 வட கொரிய வீரர்கள் பலியானதாகவும், உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்ட காயமடைந்த வடகொரிய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவும் இந்த உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மேலும் புதிய வீரர்கள், இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரிய முப்படைகளின் கூட்டு தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷிய மற்றும் வட கொரிய இராணுவத் தலைவர்கள் இந்த வீரர்களை மனித கேடயமாகக் கருதி செலவழிக்கின்றனர்.
தெரிந்தே பல சந்தர்ப்பங்களிலும் உக்ரேனிய படைகளுக்கு எதிரான நம்பிக்கையற்ற தாக்குதல்களுக்கு உத்தரவிடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இவை ஒரு முன்பே கணிக்கப்பட்ட கூட்டு உயிரிழப்புகள் என்று அவர் விவரித்தார்.

மேலும் வரும் நாட்களில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை அனுப்ப ஜோ பைடன் ஒப்புதல் அளிப்பார் என்று தெரிவித்தார். முன்னதாக உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 3 ஆம் ஆண்டை நெருங்கி வருகிறது.

- இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது என்றார் அதிபர் மேக்ரான்.
- அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோ:
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி. பிரதமராகவும், பிற உயர் பதவிகளில் பணியாற்றியபோதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் தனிப்பட்ட பங்களிப்பை அளித்தார். அவருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரை நினைவு கூருவோம் என தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்:
இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங்கின் ஆளுமையில் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன என தெரிவித்தார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார்:
இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் பிறந்த அவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். அவரது ஞானம் மற்றும் மென்மையான நடத்தைக்காக அவர் நினைவுகூரப்படுவார். பிராந்திய பிரச்சனைகளில் அவரது அணுகுமுறை பரஸ்பர புரிதல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கூட்டு முன்னேற்றத்திற்கு அவசியம் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது. பாகிஸ்தான்-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் மக்களும், அரசும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கின்றன என்றார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் இந்தியா, அமெரிக்கா நட்பு சிறப்பாக செயல்பட மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன்சிங் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- இந்த விமானத்தில் 62 பயணிகள், ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர்.
- கிரோஸ்னி மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்ப்ரேயர் 190 விமானம் நேற்று முன் தினம் பாகுவில் இருந்து ரஷியாவின் குரோஸ்னி என்ற இடத்திற்கு சென்றபோது அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்டது. அதன்படி அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் 62 பயணிகள், ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர். இதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் உயிர் பிழைத்தனர். இதில் இரண்டு சிறுமிகள் ஆவார்கள்.
விமானம் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அல்லது நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஆகிவயற்றில் ஏதாவது ஒன்று தவறுதலாக தாக்கி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உலகின் பல்வேறு மீடியாக்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் விமானத்தின் வாள் பகுதியில் ஏவுகணை பகுதிகளில் தாக்கியதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உக்ரைன் தற்போது ரஷியா மீது டிரோன் தாக்கல் நடத்தி வருகிறது. கிரோஸ்னி மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் டிரோன் ஆக இருக்கலாம் என ரஷியாவின் ஏர் பாதுகாப்பு நிலையம் தகவல் தெரிவித்து அதன்மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட பிறகு சிறிது நேரத்தில் வெளியே மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக உயிர்பிழைத்தவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் அஜர்பைஜானி மற்றும் அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யாவின் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் தான் விபத்து ஏற்பட்டதாக ஜெட் நம்புகின்றனர்.
அரசு சார்பு அஜர்பைஜான் இணையதளமான காலிபர், Pantsir-S வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை விமானத்தை வீழ்த்தியதாக அஜர்பைஜானி அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி உள்ளது. இதே கூற்றை நியூயார்க் டைம்ஸ், யூரோநியூஸ் மற்றும் துருக்கிய செய்தி நிறுவனமான அனடோலுவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விபத்து தொடர்பான கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம் என ரஷியா எச்சரித்துள்ளது. கிரெம்ளின் [ரஷிய அதிபர் மாளிகை] செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணையின் முடிவுகள் வருவதற்கு முன் யூகங்களை உருவாக்குவது தவறானது.
நாங்கள் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டோம், யாரும் இதைச் செய்யக்கூடாது. விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

டிமிட்ரி பெஸ்கோவ்
இதற்கிடையே கஜகஸ்தான் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆடியோ கேட்கப்பட்ட பின்னர்தான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும்.
- அதிக எடை கொண்ட கிரேனை கொண்டு சென்றபோது விபத்து.
- 16 பேரில் 14 பேர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் இருவரை காணவில்லை.
மத்திய தரைக்கடலில் பயணம் மேற்கொண்டபோது ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியா இடையில் ரஷிய உரிமையாளருக்கு சொந்தமான சரக்கு கப்பல் கவிழ்ந்து மூழ்கியது.
கப்பல் மூழ்கியதற்கு தாக்குதல்தான் காரணம் உள்ள கப்பல் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். கப்பலில் இரண்டு மூன்று இடங்களில் வெடிக்கும் சத்தம் கேட்டது. எஞ்ஜின் பக்கத்தில் சேதம் அடைந்தது. தொடர்ந்து கப்பலை இயக்க முடியாமல் புானதாக தெரிவித்துள்ளார்.
கப்பலில் இரண்டு அதிக எடை கொண்ட கிரேன் மற்றும் மற்ற பொருட்கள் இருந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ரஷியாவின் கிழக்கு கடற்கரையில் மிக தொலைவில் உளள விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கு கப்பல் சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கள்ளான கப்பலில் 16 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் லைஃப் ஜாக்கெட் மூலம் காயமின்றி உயிர்தப்பி ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். இரண்டு பேரை காணவில்லை.
- பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
- ஏற்றுமதி ஆகியவற்றிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோ:
கடந்த 2022-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் ரஷியாவின் முதன்மை அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
உள்நாட்டு சந்தைக்கு நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிசம்பர் 31, 2024 வரை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நெல் விதைகளைத் தவிர, அரிசி மற்றும் அரிசிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு, ஜூன் 30, 2025 வரை நீட்டித்து ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் யூரேசியன் பொருளாதார ஒன்றியம், அப்காசியா, தெற்கு ஒசேட்டியா, அத்துடன் மனிதாபிமான உதவிகள் மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கான ஏற்றுமதி ஆகியவற்றிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்
- ஆசாத் குடும்பத்தின் ஆட்சி 1970 இல் பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கீழ் தொடங்கியது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர்.
அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக கடந்த 13 வருடங்களாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டாம்ஸகஸையும் கைப்பற்றினர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
அன்றைய தினமே அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். தனக்கு முற்காலங்களில் உதவி வந்த ரஷியாவில் ஆசாத் குடும்பதோடு தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். கிளர்ச்சிக் குழுவினர் புதிய தலைமையை உருவாக்கி வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தை இழந்து, பிறந்த நாட்டையும் இழந்து நாடு கடத்தப்பட்டு ரஷிய தலைநகர் மாஸ்க்கோவில் ஆசாத்[59 வயது] தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரிடமிருந்து அவரது மனைவி அஸ்மா அல்-அசாத்[49 வயது] விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவில் தனது கணவன் ஆசாத் உடன் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கையில் அஸ்மா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தனது பிறந்த மண்ணுக்கு [லண்டனுக்கு] திரும்ப விருப்புவதாக துருக்கி, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அஸ்மா, ரஷிய நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது, தற்போது அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலனையில் உள்ளது.
சிரிய பெற்றோருக்கு 1975 இல் லண்டனில் பிறந்த அஸ்மா அல்-அசாத் பிரிட்டிஷ்-சிரிய இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்து முதலீட்டு வங்கியில் வேலை செய்துவந்த அஸ்மா, டிசம்பர் 2000 இல் பஷர் அல்-அசாத்தை மணந்தார். அந்த வருடமே ஆசாத் சிரியாவின் அதிபர் ஆனார்.


அசாத்கள்- ஒரு அலாவைட் குடும்பம் - வரலாற்று ரீதியாக சன்னி மக்கள் அதிகம் உள்ள சிரியாவில் ஆதிக்கம் செலுத்தியது. ஆசாத் குடும்பத்தின் ஆட்சி 1970 இல் பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கீழ் தொடங்கியது.
இப்போது மாஸ்கோவில் புகலிடத்தின் கீழ் வசிக்கும் பஷர் அல்-அசாத், ரஷ்ய அதிகாரிகளால் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்.
அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அவர் மாஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் 270 கிலோகிராம் தங்கம், $2 பில்லியன் ரொக்கம் மற்றும் மாஸ்கோவில் உள்ள 18 சொத்துக்கள் உள்ளிட்ட அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
- ரஷியா- உக்ரைன் இடையே டிரோன் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
- ரஷியாவின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்ரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
தற்போது உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்துவதால், ரஷியாவும் உக்ரைனுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள கசான் நகர் (டார்டஸ்டன் குடியரசு தலைநகர்) மீது உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் இரண்டு டிரோன்கள் மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய கட்டடங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிகிறது. இந்த டிரோன் தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதே ஸ்டைலில் தற்போது ரஷியா மீது உக்ரைன தாக்குதல் நடத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
கசான் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் வசித்து வரும் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குடியிருப்புவாசிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாதுகாப்பாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது.
இன்று மிகப்பெரிய டிரோன் தாக்குதலால் கசான் பாதிப்படைந்தது. முன்னதாக இன்டஸ்ட்ரியல் என்டர்பிரைசஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று காலை மக்கள் வசிக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என டார்டஸ்டன் குடியரசு தலைவர் ருஸ்டாம் மின்னிகானோவ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் பதில் ஏதும் அளிக்கவில்லை.
இன்று காலை சுமார் இரண்டு மணி நேரத்தில் மூன்று முறை அலை அலையாக டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 டிரோனகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எத்தனை டிரோன்கள் தாக்குதல் நடத்தியது என்பதை கூறு இயலாது என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் சரடோவ் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், பென்டகன், பென்சில்வேனியாவில் உள்ள நிலப்பகுதியில் விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
- வருடாந்திர ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் புதின் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
- கள் யாரோடு நீங்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
வலிமையான உலக தலைவர்களில் ஒருவராக ரஷிய அதிபர் புதின் கருதப்படுகிறார். இந்த வருடம் முடிவுக்கு வர இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வழக்கப்படி வருடாந்திர ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் புதின் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது வாழும் அல்லது உயிரிழந்த உலக தலைவர்கள் யாரோடு நீங்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த புதின், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஹெல்முட் கோல், முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் மற்றும் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகிய மறைந்த தலைவர்களுடன் தேநீர் அருந்த விரும்புவதாக புதின் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் -யிடம் இருந்து தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக புதின் அவரை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய புதின் ஆசியாவில், சீனா மற்றும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளதாக தெரிவித்தார் . இந்திய பிரதமருடன் எனக்கு மிகவும் அன்பான உறவு உள்ளது என்றும் புதின் குறிப்பிட்டார்.
- வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
- அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என புதின் தெரிவித்தார்.
மாஸ்கோ:
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார். வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மற்றும் உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை டிரம்ப் முன் இருக்கும் பெரிய சவால்கள். அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு பேசினார். மேலும், ரஷிய அதிபர் புதினுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது,, உக்ரைன் போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்து பேசப்பட்டதாக செய்தி வெளியானது.
டிரம்ப் அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயார் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என அதிபர் புதின் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
- காதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசியுள்ளார்
புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.
தடுப்பூசிகளின் ஒரு வகையான mRNA [messenger RNA] தடுப்பூசி, உடலில் உள்ள mRNA molecule ஐ பிரதி எடுத்து அதிலிருந்து நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலானது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும்.
- எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியது
- தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது குற்றம்சாட்டினர்
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று குடியிருப்பு கட்டடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.
மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாயிலில் எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று ரஷிய பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

ரஷ்ய டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், இடிபாடுகளால் சூழ்ந்த கட்டிடத்தின் உடைந்த நுழைவாயில் மற்றும் பனிப் படலத்தின் மீது கிடந்த இரத்தக் கறை படிந்த இரண்டு உடல்கள் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது இந்த கொலை அரங்கேறி உள்ளது.

இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரைன் தான் காரணம் என்று கீவ் உளவுத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பான SBU இந்த கொலைக்கு பின்னால் இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது. ஜெனரல் ஒரு போர்க் குற்றவாளி என்றும் எனவே அவர் தான் இலக்கு என்றும் உக்ரைன் கருதுவதாக கூறப்படுகிறது.
- புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
- வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இருக்கிறது என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
ரஷியாவில் சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012-ம் ஆண்டு வனத்துறையால் மீட்கப்பட்டது. அதில் ஆண் புலிக்கு போரீஸ் என்றும், பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும் பெயரிட்டு வளர்த்தனர். இந்த 2 புலிகளும் தனித்தனியாக தங்களது எல்லைகளை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவற்றை பிரித்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் சைதிரியா வனப்பகுதியில் போரீஸ் புலியை விட்டனர்.
ஆனால் அந்த புலி தனது இருப்பிடத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தது. அதே நேரம் துணையை பிரிந்த ஸ்வேத்லயா வேறு எங்கும் பயணம் செய்யாமல் விட்ட இடத்திலேயே தொடர்ந்து சுற்றியது. இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் போரீஸ் புலி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வேத்லயா இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. கடந்த 6 மாதங்களாக 2 புலிகளும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கின்றன. இவற்றின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.