search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கர் முஸ்லிம் மந்திரி குறித்து பேசியது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதற்கிடையே எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

    மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டில் லாக்கின் தொடர்பான விவரங்களை அளிக்கும்படி மத்திய தொழில்நுட்பத்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு பாராளுமன்ற நெறிமுறைக்குழு கடிதம் எழுதியுள்ளது. அடுத்த மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    "சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என ஸ்ரீஇராமபிரான் ஆலய விழாவிற்கு அழைக்கப்பட்டது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.

    "டிஸ்கவரி" சேனலை பார்த்து பாம்புகளை காப்பாற்ற கற்று கொண்டதாகவும், எண்ணற்ற பாம்புகளை தாம் காப்பாற்றியுள்ளதாகவும், கான்ஸ்டபிள் அதுல் தெரிவித்தார்.

    கனடாவுக்கான விசா சேவையை இந்தியா கடந்த மாதம் 21ம் தேதி தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு விசா சேவைகளை இன்று முதல் இந்தியா மீண்டும் தொடங்க உள்ளது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜுன்ஜுனுவில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து 90 ரன்களில் சுருண்டது. இதில் உலக கோப்பை வரலாற்றில் 40 பந்துகளில் சதமடித்து, அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    தசரா கொண்டாட்டத்தின் போது இரு இளைஞர்கள் பிரேம் மேத்தாவின் மகளை நெருங்கி, தங்களுடனும் டாண்டியா ஆட்டம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். மேலும், அவருடைய தொலைபேசி எண்ணையும் கேட்டு வற்புறுத்தினார்கள்.

    நியூயார்க் நகர சென்ட்ரல் பார்க் பகுதியில் சனிக்கிழமை அன்று, 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில் இரவு பறக்க விடப்பட்டன. அந்த டிரோன்களை இயக்குபவர்களால் வானில் பறந்த அவை, பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டது.

    மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது நேற்று அதிதீவிர புயலாக மாறி பின் மிகத்தீவிர புயலாக மாறியது. தீவிர புயலாக இருந்த ஹாமூன் வலுவிழந்து வங்கதேசம் அருகே இன்று கரையைக் கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    2030-ம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும் என எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

    ×