என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • உக்ரைன்-ரஷியா இடையே இரண்டு ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
    • உக்ரைன் எல்லைப் பகுதியில் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கால்வாசி பகுதிகளை ரஷியா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனில் அமைதி திரும்பவும், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் உலகத் தலைவர்களின் உதவிகளை நாடி வருகிறார்.

    அவ்வப்போது ரஷிய அதிபர் போர் நிறுத்தத்திற்கான ஒரு பரிந்துரையை முன்மொழிவார். அதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைன் மண்ணில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறும்வரை புதின் உடன் நேரடி பேச்சு கிடையாது என்பதில் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக உள்ளார்.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வழங்கு ஆயுத உதவிகளை வைத்து ரஷியாவை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் அமைதி நிலவ ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை சுவிட்சர்லாந்தில் ஒன்றுகூடுகின்றனர்.

    இதில் ஈகுவேடார், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா அதிபர்கள் கலநது கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று ஐப்பிரோப்பியாவின் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.

    அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். துருக்கி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகளை அனுப்புகிறது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா பொன்ற நாடுகள் அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ரஷியா கலந்து கொள்ளவில்லை. அமைதி பேச்சுவார்த்தையில் ரஷியா மற்றும் உக்ரைன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.

    என்னவாக இருந்தாலும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் போர் நிறுத்தம் ஏற்பட இந்த கூட்டத்தில் முதல்அடி எடுத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின் நேற்று, "உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டால், 2022-ல் தங்களுடைய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து உக்ரைன் துருப்புகளை திரும்பப் பெற்றால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாயர்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் புதினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • 4 பேர் கொண்ட குடும்பம் இவ்வளவு குறைந்த செலவில் சுவிட்சர்லாந்து நகரங்களை சுற்றி பார்த்ததாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

    வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது பலருக்கும் கனவாக உள்ளது. ஆனாலும் அதற்கான செலவு அதிகமாகும் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஒரு தம்பதி வெறும் ரூ.90 ஆயிரம் செலவில் 25 சுவிட்சர்லாந்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

    இந்தியரான மெஹூல்ஷா தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் 11 நாட்களில் 25 சுவிட்ஸ் நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். அவர் தினமும் சுவிட்சர்லாந்தில் எந்தெந்த நகரங்களுக்கு சென்றனர் என்ற விபரங்களையும், 11 நாட்களும் சுற்றுலாவை எவ்வாறு மகிழ்ச்சியாக கழித்தனர் என்ற விபரங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 4 பேர் கொண்ட குடும்பம் இவ்வளவு குறைந்த செலவில் சுவிட்சர்லாந்து நகரங்களை சுற்றி பார்த்ததாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. அவரது இந்த பதிவை சுமார் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
    • இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். இது இவரது 3வது பட்டம் ஆகும்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடந்த அரையிறுதியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 1-6 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட ரூட் 6-1, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதுகிறார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் நாட்டின் தாமஸ் மசாக்குடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், 2வது செட்டை கைப்பற்றினார். 3வது செட்டை தாமஸ் வென்றார்.

    இறுதியில், தாமஸ் மசாக் 6-4, 0-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுயில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூருடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹான்மேனுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இது இவரது 1100-வது வெற்றி ஆகும்.

    இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.
    • மணமக்களின் குடும்பத்தினர் மணமக்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் அதில் உள்ளது.

    திருமணத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர் தங்களது திருமணம் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடைபெற வேண்டும் என நினைப்பார்கள். சிலர் எளிமையான முறையில் திருமணத்தை நடத்துவார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

    சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்னோ அல்பைன் சிகரங்களில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 2,222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தின் போது மணமக்கள் ஐஸ்கியூப்பில் இருந்து வெளிப்படும் காட்சிகள் மற்றும் வீடியோவின் பின்னணியில் இசை தொகுப்பு ஆகியவை பயனர்களை கவர்ந்துள்ளது. மணமக்களின் குடும்பத்தினர் மணமக்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் அதில் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 



    • ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
    • கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரெயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

    அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீட்டர்) பயணம் செய்துள்ளது. கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    இதுகுறித்து ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், இந்த உலக சாதனையானது எங்கள் ஹைட்ரஜன் ரெயிலின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனை ஆகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.

    • ராணுவத்திற்கு இதுவரை குறைந்த அளவே சுவிட்சர்லாந்து செலவு செய்தது
    • ஐரோப்பிய கண்டத்தில் இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்சர்லாந்து இணையவில்லை

    முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகித்து வந்தது. இரண்டாம் உலக போர் முடிந்த பிறகும் உலகில் நடைபெற்ற போர்களில், சுவிட்சர்லாந்து எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

    இதனால் அந்நாடு உலக நாடுகளில் "நியூட்ரல்" சுவிட்சர்லாந்து என அழைக்கப்பட்டது.

    அமைதியை விரும்பும் நாடாக போரில் ஈடுபடாமல் தொடர்ந்து இருந்து வந்ததால், ராணுவத்திற்கு இதுவரை சுவிட்சர்லாந்து மிக குறைந்த அளவே செலவு செய்து வந்தது.

    சமீப சில வருடங்களாக உலகில் நடைபெறும் போர்களினால் அதிகரித்துள்ள அமைதியின்மை பல நாடுகளுக்கு போர் குறித்த சித்தாந்தங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போர்கள் சுவிட்சர்லாந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுவிட்சர்லாந்தின் ராணுவ அமைச்சர் வயோலா அம்ஹர்ட் (Viola Amherd) தெரிவித்ததாவது:

    அடுத்த 4 வருடங்களில் ராணுவ செலவினங்களுக்கான பட்ஜெட் 19 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.

    கடந்த 30 வருடங்களாக ராணுவ செலவினங்களை குறைத்து வந்துள்ளதால் நாட்டின் ராணுவத்தின் வலிமை குறைந்துள்ளது. இழந்த வலிமையை மீட்டு எடுக்க சில ஆண்டுகளாகும்.

    அடுத்த 12 வருடங்களில் ராணுவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த உள்ளோம். இந்த அணுகுமுறை தற்போதுதான் முதல்முறையாக கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்வாறு வயோலா கூறினார்.

    ஐரோப்பிய கண்டத்தில் இருந்தாலும், 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில்  (European Union) சுவிட்சர்லாந்து இணையவில்லை.

    அதிகமாக ஒதுக்கவுள்ள நிதியால், ரேடார் அமைப்புகளை மேம்படுத்துதல், குறைந்த தூர ஏவுகணைகளை உருவாக்குதல், ராணுவ டேங்குகளை அதிகரித்தல், சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் கட்டமைப்பை உருவாக்குதல் என பல திட்டங்களை சுவிட்சர்லாந்து செயல்படுத்த உள்ளது.

    முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் நடுநிலைமை வகிக்க முடிந்த சுவிட்சர்லாந்திற்கு, ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகிய 2 போர்களால் நாட்டின் எதிர்கால திட்டங்களையே மாற்ற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வஜேத்.
    • இவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    ஜெனீவா:

    உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்தப் பதவி வகிப்பார்.

    சைமா வஜேத்தின் பதவிக் காலம் 2024, பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பதவியை அடைந்த வங்காளதேசத்தின் 2-வது பிரதிநிதி இவர்.

    இவர் வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது
    • பிராந்திய அமைதி இஸ்ரேலின் அமைதியையும் உள்ளடக்கியது என்றார் ஃபர்ஹான்

    ஆண்டுதோறும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் நடைபெறும்.

    இவ்வருட கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளில் இருந்து தொழில் மற்றும் வர்த்தக துறையை சேர்ந்த அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பங்கு பெறுகின்றனர்.

    இதில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் (Prince Faisal bin Farhan) பங்கேற்றார்.

    அவரிடம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

    பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து தருவதில் இஸ்ரேலுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்று கொள்ள சவுதி அரேபியாவிற்கு எந்த தயக்கமும் இல்லை.

    பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு கிடைத்து அவர்கள் அமைதியாக வாழும் சூழல் ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும்.

    அப்போது இஸ்ரேலை தனி நாடாக ஏற்க சவுதி அரேபியா சம்மதிக்கும்.

    தற்போது இஸ்ரேல், பிராந்திய அமைதியையும், பாதுகாப்பையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

    அப்பகுதியில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் வளமான எதிர்காலம் உருவாக அமைதிதான் ஒரே வழி. போர் நிறுத்தமே அமைதிக்கான முதல் படி.

    அதற்கு நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முயற்சிக்கிறோம்.

    இவ்வாறு ஃபைசல் கூறினார்.

    பெரும்பாலும் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் நிறைந்த சவுதி அரேபியா, அரபு நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக கருதப்படுகிறது.

    கடந்த வருடம், பிராந்திய அமைதி ஏற்படும் வகையில் இஸ்ரேலுடன், சவுதி அரேபியா ஒரு ஒப்பந்தம் செய்ய இருந்தது.

    ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அமைதிக்கான சூழல் மாறி விட்டது.

    ×