என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூலை 25ம் தேதி"

    • நகைக்கடை அதிபரை மிரட்டி பணம், நகைகளை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் காட்டுபாவா பள்ளிவாசல் கீழக்குடி பற்றி பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 30) இவர் கீழசெவல்பட்டி யில் நகை கடை நடத்தி வருகிறார்.

    பின்னர் தனது உறவினர் சுப்பிரமணியன் என்பவருடன் தனித்தனியாக இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பில்லமங்கலம் சுடுகாடு அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி 2.60 லட்சம் பணத்தையும், ஆறே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அருண்குமார் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussai
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussain
    ×