என் மலர்
நீங்கள் தேடியது "155 கைதிகளுக்கு வேலை"
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் திருந்தி வாழ நினைக்கும் 155 முன்னாள் கைதிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. #Telangana #PrisonDepartment #Jobfair
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தின் சிறைத்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிளிப்கார்ட், ஹெச்டிஎப்சி உள்பட 12 நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வீட்டு வேலை, டிரைவர், எலக்ட்ரீசியன், மார்கெட்டிங் எக்சிகியூடிவ், உதவியாளர்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்றது

தெலுங்கானாவின் 31 மாவட்டங்களில் இருந்து திருந்தி வாழ நினைக்கும் 230 முன்னாள் கைதிகள் இந்த முகாமில் பங்கேற்றனர். இதில் 155 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் வேலை பெறும் முன்னாள் கைதிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Telangana #PrisonDepartment #Jobfair
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உள்பட 155 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உள்பட 155 பேர் கைது செய்யப்பட்டனர்.