என் மலர்
நீங்கள் தேடியது "24-ஆம் புலிகேசி"
Once again wit d legend @arrahman Sir for #SK14
— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 26, 2018
Happiness is meeting him often let alone writing 3 back to back albums for d Magician@Siva_Kartikeyan bro is a ray of hope 4 youngsters who dream of achieving big in life
Happy2 work wit d special @Ravikumar_Dir n @RDRajaofficialpic.twitter.com/iaCcYNGMaP


with all ur blessings&support we have started our dream bilingual Project @siva_kartikeyan in @Ravikumar_Dir directorial & Our Proud Academy Award winning @arrahman musical Shoot Starts Today along with Pooja🌸🌸 Bless & Support us😊👍@Rakulpreet#ishagopikar#Banupriya#yogibabupic.twitter.com/FE5SIZuCAJ
— 24AM STUDIOS® (@24AMSTUDIOS) June 27, 2018


ஆதம்பாக்கத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரம் நில ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன.
அவற்றை இடித்து அகற்றப்போவதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்படி இன்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில், தாசில்தார் பெனடின் முன்னிலையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய 24 கடைகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மற்றும் வீடுகளை இடிக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆக்கிரமிப்புகளை இடிக்கும் போது அதிகாரிகளுடன் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. #Tamilnews
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுகிறது.

மேலும், கோழிக்கறியை வழக்கமாக நாம் அனைவரும் பொன்னிறமாக பொறித்து உண்ணுவோம். ஆனால் அந்த பாரில் கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர். அந்த பாரில் பரிமாறப்படும் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை இந்திய மதிப்பில் 3000 ரூபாய். இருப்பினும், தங்க கோழிக்கறியை சாப்பிட வாடிக்கையாளர்கள் குவிகின்றனர். #goldchickenwings
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி சட்டசபையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருகிறார்கள்.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தினார்கள். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தவிர அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன்அன்சாரி ஆகியோர் உள்பட 97 பேர் கலந்து கொண்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதனால் சட்டசபையில் ஆளும் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் தவிர தனியரசு, டி.டி.வி. தினகரன் உள்பட 116 பேர் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாமல் சட்டசபை கூட்டம் நடந்தது. அவ்வாறு சட்டசபையை நடத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234 ஆக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே சபையை நடத்தலாம். அதாவது 10-ல் 1 பங்கு உறுப்பினர்கள் சபையில் இருந்தாலே போதுமானது. சபையை நடத்த முடியும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சபையை நடத்த முடியுமா? என்ற கேள்வியே எழாது.
ஓட்டெடுப்பு என்று வரும் போது சபையில் எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அதில் பெரும்பான்மையை கணக்கிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவைச் சேர்ந்த லி சன்ஜி என்பவர் 1994-ம் ஆண்டு தனது 3 வயது மகனை தவறவிட்டார். இதனையடுத்து தனது தொழிலை கைவிட்டுவிட்டு, நாடு முழுவதும் பயணித்த லி சன்ஜி, சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் காணவில்லை போஸ்டர்களை உபயோகித்தபடி, தன் மகனை தேடி அலைந்துள்ளார்.
24 வருடங்களாக தனது முயற்சியில் தளராத அந்த தந்தை, தற்போது தனது 27 வயதான மகன் லி லேவை கண்டறிந்துள்ளார். இறுதியில் டி.என்.ஏ பரிசோதனை மூலம் லி சன்ஜியின் மகன் என உறுதியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான விசாரணையில், 3 வயதில் லி லே தனியாக இருந்தபோது அவனை கண்ட தம்பதியினர் அவனது பெற்றோரை தேடி அலைந்ததாகவும், பெற்றோர் கிடைக்காததால், லி லேவை அவர்களுடன் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வயதில் தவறவிட்ட தனது மகனை, தொழில் உட்பட அனைத்தையும் இழந்துவிட்டு, தேடி அலைந்து 24 வருடங்களுக்கு பிறகு கண்டறிந்த தந்தையின் பாசம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மும்பை:
லட்சுமி விலாஸ் வங்கி அளித்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிய வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.
உத்தரவாத கடிதங்கள் மூலம், நிரவ் மோடி பெற்ற ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன்தொகையை அவர் வெளிநாட்டில் போலி நிறுவனங்களுக்கு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.இந்த வழக்கில், அமலாக்கத்துறை நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அது, 12 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை ஆகும்.
நிரவ் மோடி, அவருடைய தந்தை, சகோதரர், சகோதரி, மைத்துனர் உள்பட 24 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை கோர்ட்டு விரைவில் ஆய்வு செய்யும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PNBCase #NiravModi #EDFile
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு தகுதியான 281 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
அதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 257 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களை 2 குழுக்களாக பிரித்து மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.
இதில் சில காளைகள் மாடு பிடி வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசி பிடிபடாமல் பந்தய எல்லைக்கோட்டை சென்றடைந்தன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் நீண்டநேரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்களான தொண்டமாந்துறையை சேர்ந்த ஆண்டனிசாமி (வயது 50), பூலாம்பாடி பாஸ்கர்(21), லால்குடி சதீஷ் (30), ஜெஸ்டின்ராஜ் (27), தம்மம்பட்டி கருப்பண்ணன்(53) உள்பட 12 பேரும், பார்வையாளர்களான அன்னமங்கலம் ராபின் (23), அரசலூர் அரவிந்த்(19) உள்பட 12 பேர் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசு, அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் செல்வராஜ், தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.