என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 7 years in prison
நீங்கள் தேடியது "7 years in prison"
- வாலிபரை குத்தி கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கொலை வழக்கில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மற்றொரு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் சந்தை தெருவை சேர்ந்தவர் செந்தில்(28). இவரை கடந்த 17.5.2016-ந்தேதி கலைச்செல்வம்(28), அவரது தம்பி கலையர சன்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றனர்.
இதுகுறித்து கம்பம் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உத்தம பாளையம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே கலையரசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உதவி அமர்வு நீதிபதி சிவாஜி குற்றம்சா ட்டப்பட்ட கலை ச்செல்வத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X