என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK"

    • தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025.
    • தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம்.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025. ஆனால் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் நம்பி நாராயணனின் ஆலோசகராக இருக்கும் நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல்.

    தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இக்கொள்கையை விமர்சிப்பதாக நினைத்து IIT வல்லுநர்கள், இளந்தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறவுள்ளோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.

    அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
    • ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

    அப்போது அவர், " தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…

    எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!

    2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்! என்று கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழக மக்களின் Out of Control-ஆக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.

    அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சராக ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது.

    ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.
    • அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டுக்கொள்வதற்கு அரசாணை வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார். விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

    அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.

    "அனைவருக்கும் எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதம் பொறுத்து இருந்தால் தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடித்த உடனேயோ குழந்தை பிறக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும். எனவே, அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும் வரை சற்று காத்திருக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் பொன்முடியின் பேச்சால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி.யின் பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற மக்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    மக்கள் பிரதிநிதிகள் கண்ணியமாக பேச வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்த நிலையில், தி.மு.க. எம்.பி.யின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    • தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
    • எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!

    2026-லும் #DravidianModel ஆட்சிதான் என்றும் தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு!

    தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…

    எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!

    2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
    • தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் மாருதி நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று இருந்தார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என மத்திய உள்துறை அமித்ஷா குற்றம் சாட்டியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார். 

    • இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
    • பிரச்சனைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மறைந்த கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் அறிவாலயம் அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.

    "பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?

    சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

    அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

    மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    • ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள்.
    • ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் சூப்பர்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை நிறுவனத்தின் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துககளைத் தங்கள் ஆட்சியில் அபகரிக்க முயன்ற சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நூதன ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.

    அந்த நிறுவனத்திற்கு ரூ.90 கோடியைக் கடனாகக் கொடுப்பது போல் பாசாங்கு காட்டிவிட்டு பின்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதன் மொத்த பங்குகளையும், ராகுல் காந்தியை முக்கிய பங்குதாரராகக் கொண்ட "யங் இந்தியன்" என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக மாற்றியுள்ளது காங்கிரஸ்.

    இத்தனைக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போன்றோர் பங்கு வகிக்கும் பழமையான அந்த நிறுவனத்தின் சொத்துக்களையே தங்கள் ஆட்சியில் சத்தமில்லாமல் சுருட்டிய காங்கிரஸ். எத்தனை அப்பாவி மக்களின் உழைப்பையும் சூறையாடியிருக்கும்?

    அதிகாரத்தை கருவியாகக் கொண்டு காங்கிரஸ் தான் இத்தனை ஊழல்களில் ஊறியது என்றால். அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்து காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்து வருகிறது.

    இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சியில் எங்கும் ஓடி ஒளிய முடியாது. எனவே ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்.

    இப்படி ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் சூப்பர். இந்த கட்சிகளின் ஜோடிப்பொருத்தம் மிகப் பிரமாதமாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
    • உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை.

    திருப்பூர்:

    அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி தொடர்பாக திருப்பூரில் 2 கட்சி நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூரில் இன்று அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சீனிவாசன் கூறுகையில்,

    முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசிய வீடியோ முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதால் தான் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிடிக்காதவர்களால் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.

    இரண்டும் சேர்ந்தால் தி.மு.க., காணாமல் போய்விடும் என்பதால் தான் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் என்று தான் குணசேகரன் தெரிவித்துள்ளார். ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஏராளமான பயன்களை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள். பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாங்கள் அல்ல.

    இந்த முறை எங்கள் கூட்டணிக்கு அதிகபட்ச இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்கும். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி சாதாரண தொண்டரின் உணர்வு போல தான் பேசியுள்ளார். அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்காது. அவர் அ.தி.மு.க., குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில்,

    சமூகவலைதளங்கள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை. அதனை வெட்டி ஒட்டி போடும் போது தான் சிக்கல் எழுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்ற கருத்தை தான் நான் ஏற்பேன். கட்சி ஒற்றுமையாக உள்ள இடத்தில் தான் நான் இருப்பேன். எல்லோரையும் தாய் போல் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

    இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க., பின்னர் பழியை தூக்கி மற்றவர்கள் மேல் போட்டு விடுகின்றனர். எதிரியை வீழ்த்த அமைக்கப்பட்டதே தேர்தல் கூட்டணி. தேசியத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் கட்சியை வீழ்த்தவே இந்த கூட்டணி. அடிச்சு ஆடுவோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கான கூட்டணி இது தான்.தி.மு.க., கூட்டணி குடும்பத்திற்கான கூட்டணி. அ.தி.மு.க.-பா.ஜ.க., கூட்டணி ஆட்சியின் போது தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

    • மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
    • குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.

    சென்னை:

    கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.

    இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்

    தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், "இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிர் அணியினர் கையில் செருப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்தியா உள்ளிட்ட முக்கிய பெண் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

    • அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    • சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

    3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம் என அதிமுகவினர் சபாநாயகரிடம் முறையீடு செய்தார்கள்.

    இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "அரைமணி நேரத்திற்கு முன்னதாக கடிதம் கொடுத்தீர்கள், அது பரிசீலனையில் உள்ளது. நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை. ஏற்கனவே அலுவல் நிறைய இருக்கிறது அதனால் இன்று எடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    • பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசிரியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.

    அதுவும், "பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது" எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.

    எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    ×