search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "luxury cars"

    • தமிழ்நாட்டில் 2023-24 ஆண்டு 8,475 சொகுசு கார்கள் விற்பனை.
    • கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட இது 46.2% அதிகம்.

    தமிழ்நாட்டில் ஆடி, லம்போர்கினி, பி.எம்.டபுள்யூ, ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தமிழ்நாட்டில் அதிகளவிலான சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2019-2020 ஆம் ஆண்டில் 4,187 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், 2020-21ல் 2,816 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்றால் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. பின்னர் 2021-22 ஆம் ஆண்டில் 3,954 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன.

    பின்னர் 2022-23 ஆம் ஆண்டில் 5797 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டு 8,475 ஆக அதிகரித்துள்ளது.

    இது கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட 46.2% அதிகமாகும்.

    2023-24 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,192 பி.எம்.டபுள்யூ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து 1,122 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் 217 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் 84 போர்ஷே கார்களும் 77 ஆடி கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் அதிகபட்சமாக சென்னையில் 1668 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4 ரோல்ஸ் ராய்ஸ் காட்களும் அடங்கும்.

    இதற்கு அடுத்ததாக கோவையில் 510 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 110 கார்களும் திருநெல்வேலியில் 95 கார்களும் திருச்சியில் 65 கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கொரோனாவிற்கு பிறகு நிறைய இளம் தொழிலதிபர்கள் சொகுசு கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், சொகுசு கார்களை வாங்கும் 70% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ராம்சரண் ஆடம்பர சொகுசு கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் உள்ளவர். தற்போது அவர் 7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியுள்ளார்.

    கருப்பு நிறத்திலுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார் ராம் சரண். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அண்மையில் தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராம் சரணிடம் உள்ள சொகுசு கார்கள் :

    மெர்சிடிஸ் - மேபேக் ஜிஎல்எஸ் 600 - ரூ. 4 கோடி

    ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் வி 8 - ரூ 3.2 கோடி

    ஃபெராரி போர்டோஃபினோ - ரூ 3.50 கோடி

    ரேஞ்ச் ரோவர் ஆக்டோபயோகிராபி - ரூ 2.75 கோடி

    பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் - ரூ. 1.75 கோடி

    மெர்சிடிஸ் - பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே ரூ.1 கோடி

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. #ImranKhan
    ஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றதும் அரசில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டார். பிரதமர் பங்களாவில் தங்காமல் ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்கிறார்.

    கவர்னர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகள் பங்களாக்களில் ஆடம்பர வசதிகள் கூடாது என்றும் உத்தரவிட்டார். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    பிரதமர் பயன்படுத்தும் புல்லட் புரூப் உள்ளிட்ட ஆடம்பர கார்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 102 சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட்டு பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.


    அதன்படி நேற்று முதல்கட்ட ஏலம் நடந்தது. அதில் 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. அதில் 8 புல்லட் புரூப் கார்கள். 4 மெர்சிடஸ்பென்ஸ் கார்கள் உள்ளிட்டவை அடங்கும். அவை அனைத்தும் மார்க்கெட் விலையை விட கூடுதலாக ஏலம் போனது.

    அடுத்த கட்டமாக பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ள 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட உள்ளன. மேலும் 8 எருமை மாடுகளும் ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவை முன்னாள் பிரதமர் நாவஸ் செரீப் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டவை. #Pakistan #ImranKhan
    ×