என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AAP"

    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

    மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    2-வது நாளான வெள்ளிக்கிழமை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினர். மணிப்பூர் ரத்தம் சிந்துகிறது என்ற முழக்கத்துடன் அவையின் மைய பகுதியில் முற்றுகையிட்டனர். இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் 2-வது நாளாக முடங்கி இருந்தன.

    இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று 3-வது நாளாக அமளி நிலவியது.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி முறையிட்டார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

    இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, மணிப்பூர் விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

    12 மணிக்கு பிறகு பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன.

    பாராளுமன்ற மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.

    இது தொடர்பாக அவை தலைவர் ஜெகதீப்தன்கருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்ஒபிரையலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் அவை முதலில் 12 மணி வரையும், 2-வது முறையாக 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் கடும் அமளியில் ஈடுபட்டார். அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளி செய்தார்.

    இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    • நிர்வாகத்தில் அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசு- கெஜ்ரிவால் இடையே மோதல்
    • உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த நிலையில், சட்ட திருத்தம்

    டெல்லி மாநிலத்தில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், டெல்லி மாநில முதல்வரான கெஜ்ரிவாலுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக கெஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது மாநில அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    இதனால் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இன்று சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி. சுஷில் குமார் ரிங்கு கூறுகையில் ''ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மசோதாவிற்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற அவைக்கு கொண்டு வந்து, அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவது அரசியலமைக்கு எதிரானது. மேலும், அம்பேத்கரின் அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.

    மத்திய அரசு ஆம் ஆத்மி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகழ் அதிகரித்து வருவதை கண்டு பயந்துள்ளது.'' என்றார்.

    • ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்.
    • மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.

    பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர் சுசில் குமார் ரிங்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மக்களவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரின்குவை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் மக்களவை இடைநீக்கம் செய்துள்ளது.

    மக்களவை டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா நிறைவேற்றியதால், அவையின் நடுபகுதிக்கு வந்த ரிங்கு காகிதங்களை கிழித்து சபாநாயகர் ஓம் பிர்லா மீது வீசினார்.

    மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிர்லா அவையில் நடந்த ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் கேட்டார்.

    மக்களவை உறுப்பினர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பிர்லா, ரிங்குவை முறையாகப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து மழைக்கால அமர்வின் மீதமுள்ள கூட்டத்திற்கு அவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சர் முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் ரிங்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவை ஒத்திவைக்கும் வரை உறுப்பினர்கள், அங்கேயே இருக்க உத்தரவு
    • பா.ஜனதா கூட்டணிக்கு பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதர்வு

    நிர்வாகத்தில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநகருக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது. இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது.

    உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு டெல்லி அரசுக்கு முட்டுக்கட்டை போட்டது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி நிர்வாகம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து, பெரும் அமளிக்கு இடையே நிறைவேற்றியது.

    இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவையில் எப்படியாவது தோற்கடித்துவிட கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டார். இதனால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கட்டாயம் எதிர்க்கும்.

    இதனால் காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சிகள் தங்களுடைய எம்.பி.க்கள் தவறாமல் மாநிலங்களவைக்கு வரவேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைமை கொறடா ''இன்று நடைபெறும் அவைக் கூட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவை ஒத்திவைக்கும் வரை, அவையில் இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.களுக்கும் கொறாடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 100 எம்.பி.க்களுக்கு மேல் உள்ளனர். ஏற்கனவே பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 238 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு போதுமான எண்ணிக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஏழு தொகுதிகளிலும் போட்டியிட தயாராக கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் தகவல்
    • தனித்து போட்டி என்றால், இந்தியா கூட்டணி என்? என ஆம் ஆத்மி கேள்வி

    இந்தியா பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. சுமார் ஏழு மாதங்களே உள்ளதால் பா.ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை அமைக்க தொடங்கிவிட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், வியூகம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைமை, 18 மாநில கட்சித் தலைவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தியது.

    ஆலோசனைக்குப் பிறகு டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லம்பா, ''டெல்லியில் உள்ள மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும்படி தங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    2024 தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என எங்களுக்கு கூறப்பட்டது. டெல்லி மாநில ஆலோசனைக்கு முன், தலைமை 18 மாநில தலைவர்களை சந்தித்து பேசியது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் உடனடியாக பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏழு மாதங்களே உள்ளது. ஏழு தொகுதிகளுக்காக அனைத்து தொண்டர்களும் தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது'' எனத் தெரிவித்தார்.

    இதனால் ஆச்சர்யம் அடைந்த ஆம் ஆத்மி, கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டால், I.N.D.I.A. கூட்டணி தேவையா? எனவும் கேள்வி எழுப்பியது.

    உடனடியாக இதுகுறித்து டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பாபரியா ''லம்பா கூறியது அவரது கருத்தாகும். கூட்டத்தில் இடம் பகிர்வு குறித்து எந்த திட்டமும் இல்லை. டெல்லியில் கட்சியை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது'' என்றார்.

    இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோர் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வருகிற 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    பா.ஜனதாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடம் பிடித்துள்ளன. பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி மோதல் உள்ள இடங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, எப்படியும் அதிக இடங்களில் போட்டியிட விரும்பும்.

    இந்த விவகாரம் I.N.D.I.A. கூட்டணியில் கருத்து மோதலை உருவாக்க முக்கிய காரணமாக கருதப்படும் சீட் பகிர்வின் முதற்படி என பார்க்கப்படுகிறது.

    இதுபோன்று பல மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகள் இடையே முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. முரண்பாடுகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டால், பா.ஜனதா கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    • ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது
    • அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்

    ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. 200 மாநாடு 32 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திலும் மாநாடு நடைபெற்றது. உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இதனால் டெல்லி நகரை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுவர்கள் அனைத்திலும் வண்ண வண்ண படங்கள் வரைதல், மரங்கள் வளர்த்தல், பூச்செடி வைத்தல், சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    டெல்லி என்றாலே மத்திய அரசுக்கும், அம்மாநில அரசுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது டெல்லியை அழகுப்படுத்துவதிலும் பா.ஜனதாவுக்கும், ஆம்ஆத்மிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    டெல்லி மாநில அரசின் செலவில்தான் நகரம் புதுப்பொழிவாக ஜொலிக்க இருக்கிறது என்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், மத்திய அரசுதான் பணம் செலவழிக்கிறது என்கிறார் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர். இதனால் டெல்லியை அழகுபடுத்தும் பணியில் பணம் செலவழிப்பது யார்? என்பதில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் விரேந்த்ரா சச்வாடா கூறுகையில் ''டெல்லியில் ஜி-20 மாநாட்டிற்காக, நகரை அழகுப்படுத்தும் பணிகளை டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி செய்து வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் மத்திய அரசு வழங்கும் நிதியில் இருந்து செய்யப்படுகிறது'' என்றார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ''புதுடெல்லி நகராட்சி கார்பரேசன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் சாலைகள் தொடர்பான திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு பணம் அளித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியால் செய்த வேலைகளை பா.ஜதான செய்தது என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுப்பணித்துறை சாலைகளுக்கு அனைத்து பணமும் டெல்லி அரசின் பொதுப்பணித்துறையால் செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.சி.டி. சாலைகள் பணிக்கான செலவை எம்சிடி செய்துள்ளது'' என பதிலடி கொடுக்கப்பட்டது.

    இதற்கு சச்வாடா பதில் கூறுகையில் ''டெல்லியை அழகுப்படுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசு செய்த வேலைகளை ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் மந்திரிகள், தாங்கள் செய்ததாக பெயரை தட்டிச்செல்ல பார்ப்பது அவமான செயல்'' என்றார்.

    மேலும், "டெல்லியை அழகுப் படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செய்ததாக கெஜ்ரிவால் அரசால் சொல்ல முடியுமா?" என சாவல் விட்டுள்ளார். 

    • குடியரசு தலைவர் மாளிகை அழைப்பிதழில் பாரத் என அச்சிடல்
    • சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வர வாய்ப்பு எனத் தகவல்

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டமைப்புக்கு இந்தியா (I.N.D.I.A.) எனப் பெயரிட்டுள்ளது.

    இது இந்திய நாட்டை குறிப்பது போன்று உள்ளதால், பா.ஜனதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில்தான் குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது.

    ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில், இந்தியா- பாரத் சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா கூறுகையில் "நமது தேசிய அடையாளம் பா.ஜ.க.-வின் தனிப்பட்ட சொத்து அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கருத்து தெரிவித்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    • பா.ஜ.க.-விற்கு எதிராக பல கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன
    • நாடு 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தம் என்கிறார் கெஜ்ரிவால்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    இக்கூட்டத்தொடர் குறித்து ஆகஸ்ட் 31-ல் அறிவிக்கும் போது, "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். கூட்டத்தொடரில் என்னென்ன முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இச்செய்திக்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில், அவர் பெயரை குறிப்பிடும் இடத்தில் "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) எதிராக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இ.ந்.தி.யா. (I.N.D.I.A.) எனும் கூட்டணியை உருவாக்கின. இதில் ஆம் ஆத்மி கட்சி (AAP) எனப்படும் புது டெல்லியின் ஆளும் கட்சியும் அடக்கம்.

    "இந்தியா" எனும் பெயரை "பாரத்" என மாற்றும் முயற்சி நடைபெற போவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புது டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல் எனக்கு வரவில்லை. 140 கோடி மக்களுக்கான இந்நாடு ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சிகள் இ.ந்.தி.யா. என ஒரு கூட்டணி அமைத்து விட்டால், இந்தியாவின் பெயரையே 'பாரத்' என மாற்றுகிறீர்கள். எங்கள் கூட்டணியின் பெயரை 'பாரத்' என மாற்றினால், நாட்டின் பெயரை 'பாரத்' என்பதிலிருந்து 'பா.ஜ.க.' (BJP) என நீங்கள் மாற்றுவீர்களா என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத போதிலும் இந்த சர்ச்சையில் பா.ஜ.க. பிரமுகர்களும், எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கடுமையான கருத்துக்களை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.

    • சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
    • INDIA என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான்- பொன்முடி

    சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராகவ் சதா இதுகுறித்து கூறியதாவது:-

    நான் சனாதனத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எதிர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் எதிர்க்கிறேன். இதுபோன்ற கருத்துகளை கூறக் கூடாது. எந்தவொரு மதத்திற்கு எதிராகவும், இதுபோன்ற கருத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அனைத்து மதத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

    சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது INDIA கூட்டணியின் கருத்து என்று அர்த்தம் இல்லை. நாடு எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றிற்கு எதிராக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து மாநிலத்தின் மாவட்டத்தில் இருந்து சிறிய தலைவரால் உருவானது. இது கூட்டணியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது.

    இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

    திமுக அமைச்சர் பொன்முடி, இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் எனப் பேசிய வீடியோவை நேற்று பா.ஜனதா வெளியிட்டுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது
    • அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதேவேளையில், டெல்லி மாநில முதல்வராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்தி ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இந்த கட்சியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஜாமின் பெற முடியாத நிலையில், ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    துணை முதல்வர் இருந்தவர் ஜெயிலில் உள்ளார். ஒருவேளை முதல்வரான கெஜ்ரிவாலும் ஜெயிலுக்கு சென்றால்? அரசை வழி நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி மாற்றுத்திட்டம் வைத்திருக்கும்.

    இதுதொடர்பாக டெல்லி மாநில மந்திரி சவுரப் பர்த்வாஜ்யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில் "மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சியை தண்டிப்பதற்கான சதிச் செயலாகும்.

    ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் தற்போதைய நிலையில், மாற்று திட்டம் குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அதுபோன்று ஒரு ஆலோசனை நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. கெஜ்ரிவால் எங்களுடைய தலைவர். அவருடைய உத்தரப்படி செயல்படுவோம்'' என்றார்.

    • மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலுக்கு சம்மன்
    • சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியிருந்தது

    மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது என ஆம் அத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த வழக்கும் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ, கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.

    • சம்மன் அனுப்பியது சட்டவிரோதம்
    • அரசியல் உள்நோக்கம் கொண்டது

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த திங்கட்கிழமை அனுப்பிய சம்மனில், இன்று அலுவலகம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால், அரவிந்த கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் விசாரணைக்குப்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

    இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு அனுப்பிய சம்மனை திரும்பப் பெற வேண்டும் என்றும், சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என்றும், பா.ஜனதாவின் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆஜராகாத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×