என் மலர்
நீங்கள் தேடியது "Aavin Ghee"
- தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன.
- ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது.
அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
- ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்ந்து உள்ளது. அதாவது லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும் 500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
200 மி.லி. நெய் ரூ.130-ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும் பிரீமியம் நெய் 500 மி.லி. ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் உயர்ந்துள்ளது.
15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகி உள்ளது. 100 மி.லி. பாக்கெட் நெய் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. 15 கிலோ நெய் டின் ரூ.9,680-ல் இருந்து ரூ.10,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 2-வது முறையாக நெய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
- இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.
ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?
இவ்வாறு இந்த பதிவில் கூறியுள்ளார்.
- தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர்கள், விற்பனை மையங்களில் ஆவின் நெய் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
- ரேஷன் கடைகளில் ஆவின் நெய் பாக்கெட் விற்பனைக்கு ஆர்டர் கேட்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் நெய் அதிகளவில் பயன்படுத்துபவர்கள் என்ற அடிப்படையில் ஆவின் நிறுவனம் சார்பில் 100 கிராம் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டது. 50 லட்சம் பாக்கெட் உற்பத்தி செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்தன.
ஏழை-எளிய மக்கள் ஆவின் நெய்யை பயன்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர்கள், விற்பனை மையங்களில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 100 கிராம் ஆவின் நெய் விலை ரூ.75 ஆகும்.
இதுவரையில் 30 லட்சம் 100 கிராம் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் 20 லட்சம் பாக்கெட்டுகள் விற்பனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையா தெரிவித்தார்.
திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் 100 கிராம் பாக்கெட் அதிகளவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அனைத்து ஆவின் விற்பனை மையங்களில் 100 கிராம் நெய் பாக்கெட் விற்பனைக்கு உள்ளது. இதுதவிர கூட்டுறவு விற்பனை சங்கங்கள் டி.யு.சி.எஸ். மற்றும் அதனுடைய ரேஷன் கடைகளிலும் ஆவின் நெய் பாக்கெட் விற்பனைக்கு ஆர்டர் கேட்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக நெய் பாக்கெட் தேவைப்பட்டாலும் வினியோகிக்க தயாராக இருக்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு நெய், வெண்ணெய் அதிகமாக விற்பனை ஆகும் என்பதால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகாசி:
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் சுமார் ரூ.1கோடி மதிப்பில் ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார்.
ஆவின் துறை இயக்குநர் காமராஜ், சந்திரபிரபா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ஆவின் பாலகத்தை திறந்து வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக ஆவின் பாலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதிலும் 500 இடங்களில் ஆவின் பாலகம் திறக்கப்பட உள்ளது. சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வெளிநாடுகளிலும் விற்பனை நடைபெறும் அளவிற்கு ஆவின் தரம் உயர்ந்துள்ளது. மேலும் துபாய், இலங்கை, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆவின் என்றாலே மக்கள் விரும்பக்கூடிய பால் என்ற அளவில் ஆவின் தரம் உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனம் லாப நோக்குடன் செயல்படவில்லை. தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஆவினில் விற்பனையும், கொள்முதலும் கூடியிருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.38 கோடி அளவில் விற்பனை நடைபெறுகிறது. ஆவின் வரலாற்றில் இது போன்ற விற்பனை எட்டப்படவில்லை. ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிளும் ஆவின் விற்பனை நடைபெற்று வருகிறது.
திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 100டன் ஆவின் நெய் வேண்டும் என்று எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. திருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய்தான் பயன்படுத்த போகின்றனர். வெளி நாடுகளில் ஆவின் நெய் நன்றாக இருப்பதாக அந்த நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆவின்துறை மேலும் மேலும் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கண்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சண்முகக்கனி, எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், சிவகாசி யூனியன் ஆணையாளர்கள் சுப்பிர மணியன், சங்கர நாராயணன் மற்றும் அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.