என் மலர்
நீங்கள் தேடியது "Abhishek Sharma"
- வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர்.
- கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கிய ஷ்ரேயாஸ் இந்த முறை இடம் பிடிப்பார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
இந்நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடைசியாக அறிவித்தபோது, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற வாரியத்தின் கோரிக்கையை நிறைவேற்றாததற்காக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷானை நீக்கியது. மேலும் ஐயர் மற்றும் கிஷானை மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்குவதில் வாரியம் எந்த தயக்கமும் காட்டவில்லை .
இந்த முறை அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பிடித்தாலும் அதே அளவில் எதிர்பார்க்கலாம். ஷ்ரேயாஸ் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பிடித்தாலும் இஷான் கிஷான் இடம் பெறுவது உறுதிப்படுத்த முடியாது நிலையில் உள்ளது.
இந்நிலையில் வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான வகையாகும்.
இப்போது கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களை A வகைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இளம் வீரர்களான நிதிஷ் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மாடல் அழகி தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை தொடர்பாக கடிதம் எழுதி வைக்காத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். தன்யா சிங், சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கான காணரம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம், தன்யா கிங் தற்கொலை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அபிஷேக் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் தன்யா சிங்கும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாடல் அழகி தன்யா சிங் அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகுதான் இது தொடர்பாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அதேவேளையில் அபிஷேக் சர்மா, தன்யா சிங்கின் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்தி வைத்திருந்ததாகவும், அவருடைய மெசேஜ்-க்கு பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறை நீண்டு நேரம் திறக்கப்படாத நிலையில், அவரது தந்தை சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பேஷன் டிசைனரான அவருக்கு, குறிப்பிடத்தகுந்த ரசிகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.
- ஐபிஎல் தொடரில் அதிகவேக அரைசதம் அடித்த வீரர்களில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே இவரது சாதனை இளம் வீரர் அபிஷேக் முறியடித்தார்.
அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேக அரை சதம் விளாசிய 3-வது வீரரானார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வாலும் (13 பந்தில்) 2-வது இடத்தில் கேஎல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் (14) உள்ளனர்.
- திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார்.
- அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 24 பந்தில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 23 பந்தில் 63 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அணியாக அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.
- அபிஷேக் சர்மா 22 பந்தில் 68 ரன்கள் விளாசினார்.
- 3 பவுண்டரி, 7 சிக்ஸ் விளாசிய அவர், ஐதராபாத் அணிக்காக அதிவே அரைசதத்தை பதிவு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிளிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இலக்கை துரத்தியபோது 209 ரன்கள் தேவை என்ற நிலையில் 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
நேற்று மும்பை அணிக்கெதிராக 277 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது. இரண்டு போட்டிகளிலும் 23 வயதேயான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். கொல்கத்தா அணிக்கெதிராக 19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் விளாசினார்.
நேற்று 22 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். மேலும் ஐதராபாத் அணிக்காக அதிவேக (18 பந்தில்) அரைசதத்தை பதிவு செய்தார்.
இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவர் டிராவிட் ஹெட் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் (22 பந்தில்) குவித்தது குறிப்பிடத்தக்கது.
தனது அதிரடிக்கு அணி நிர்வாகம் வழங்கியுள்ள சுதந்திரம்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உண்மையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் என்று நான் உணரவில்லை. வழக்கம்போல் நான் அரைசதம் அடித்ததும் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அவுட்டாகி வெளியே வந்த பின்னர்தான் அதிவேக அரைசதம் என உணர்ந்தேன். அதை நான் ரசித்தேன்.
இந்த போட்டிக்கு முன்னதாக பேட்ஸ்மேன் அனைவருக்கும் மிகவும் எளிதான தகவல் பரிமாறப்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த தகவல், ஒவ்வொருவரும் களத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடைய அற்புதத்தை (தங்களுக்குள் இருக்கும் திறமையான ஆட்டம்) வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நீங்கள் இதை பெறும்போது, அது மிகப்பெரிய நேர்மறையான தகவலாக இருக்கும். இது உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஆதரவாக இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்தவரான டிராவிட் ஹெட் உடன் இணைந்து பேட்டிங் செய்தேன். அவருடன் இணைந்து பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்தேன்.
இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்தார்.
- ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின
- தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்
ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின.
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்தினார்.
அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆட்டநாயகன் விருது கொடுத்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி அபிஷேக் சர்மாவுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.
இதே போல் கடந்த முறை, ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- Abhishek Sharma will be ready for India in six months Yuvraj Singh
- ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 வயதான அபிஷேக் சர்மா யார் பந்து வீசினாலும் சிக்சர், பவுண்டரி விளாசுகிறார். டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து பவர்பிளேயில் எதிரணியை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.
இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்டசத்திர ஆல்ரவுண்டர் யுராவஜ் சிங் கூறுகையில் இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்கு தயாராகிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-
இந்திய அணியில் தேர்வு ஆவதற்கான நிலையில் உள்ளார். ஆனால், தற்போது அவர் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. உலகக்கோப்பையை பொருத்தவரையில் நாம் அனுபவமான வீரர்களை எடுக்க வேண்டும். உண்மையிலேயே சில வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். உலகக் கோப்பைக்கப் பிறகு, அவர் இந்தியாவுக்காக விளையாட தயாராக வேண்டும். இதில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். வரும் ஆறு மாதங்கள் அபிஷேக் சர்மாவுக்கு முக்கியமானது.
அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய ஸ்டிரைக் ரேட் அபாரம். ஆனால் மிகப்பெரிய ஸ்கோர் இன்னும் வரவில்லை. இதுபோன்ற ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம். சிறந்த ஸ்டிரைக் ரேட் இருந்தபோதிலும், நீங்கள் இந்தியாவுக்கு தகுதியானவராக சில பெரிய ஸ்கோர்கள் தேவை.
பெரிய ஷாட்டுகள் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது. இவர் பெரிய ஷாட் அடிப்பது சிறந்தது. ஆனால், ரொட்டேட் ஸ்டிரைக் செய்வதற்கு சிங்கிள் எடுப்பது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பாக பந்து வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்வது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.
டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து அவர் அதிக நம்பிக்கை பெற்றுக் கொண்டிருப்பார். தற்போது டிராவிஸ் உலகத்தரம் வாய்ந்த வீரர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். சிறந்த தொடக்கத்தை எப்படி மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவது என்பதை கற்றுக் கொள்ள அபிஷேக் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதைத்தான் அவர் டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
- சன்ரைசர்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்னுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.
இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.
கடந்த 4 ஆட்டங்களில் 3 சறுக்கலை சந்தித்துள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 174 ரன் இலக்கை மும்பை அணி 17.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. எனவே அந்த அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 444 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (339), அபிஷேக் ஷர்மா (326), நிதிஷ்குமார் ரெட்டியும், பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமாரும் வலுசேர்க்கிறார்கள்.
கடந்த சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மாவும், ஹென்ரிச் கிளாசெனும் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.
லக்னோ அணி
லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.
லக்னோ அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மண்ணை கவ்வியது. 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் 137 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (36 ரன்), லோகேஷ் ராகுல் (25 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த மோசமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் லக்னோ அணி உள்ளது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதம் உள்பட 431 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 352 ரன்), நிகோலஸ் பூரன் (315 ரன்), குயின்டான் டி காக் நல்ல நிலையில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர்
மயங்க் யாதவ் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதுடன், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பந்து வீச்சில் யாஷ் தாக்குர், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கிறார்கள். குருணல் பாண்ட்யா ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.
வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.
லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிலோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், மொசின் கான் அல்லது யாஷ் தாக்குர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார்.
- இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் தேர்வுக்குழு கதவையும் கிட்டத்தட்ட உடைத்துள்ளதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார். இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.
அந்தளவுக்கு பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் இன்னும் பந்து வீசவில்லை. அவர் நல்ல ஆல் ரவுண்டர். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் சதத்தை தவற விட்டதற்காக மகிழ்ச்சியுடன் இல்லை. ஆனால் அவர் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸை விளையாடினார். ரஞ்சிக் கோப்பையில் என்னுடைய தலைமையில் தான் அவர் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்.
அந்த வகையில் இந்தளவுக்கு வளர்ந்து அவர் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவை சுற்றியுள்ளார். ஒருநாள் அவர் இந்திய அணிக்குள் நுழைந்து விடுவார்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.
அதே போல அபிஷேக் சர்மா விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங்கும் சமீபத்தில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார்.
முதலில் நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியில் இறங்கினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார்.
- முதலில் ஆடிய இந்தியா 234 ரன்களை குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

அடுத்து கெய்க்வாட்டுடன் ரிங்கு சிங் இணைந்தார். ருத்ராஜ் அரை சதம் கடந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களைக் குவித்துள்ளது. ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களை எடுத்து தோற்றது.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 234 ரன்களைக் குவித்தது. முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.
ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் வெஸ்லி மதேவரே ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென்னெட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.