என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Suri"

    • விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார்.
    • கொட்டுக்காளி, விடுதலை-2 ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

    வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் நகைச்சுவை காட்சியில் நடித்து பிரபலமானவர் சூரி. தொடர்ந்து பல படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்தார்.

    இந்நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை அடைந்தது.

    அடுத்ததாக சமீபத்தில் வெளியான கருடன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் கொட்டுக்காளி, விடுதலை-2 ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.


    இந்நிலையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சூரி சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்சில் கூலிங் கிளாஸ் போட்டபடி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சூரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு, இது நம்ம புரோட்டா சூரியா? என கேட்டு ஏராளமான பார்வையாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள்.
    • விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது.

    திருச்செந்தூர்:

    நடிகர் சூரி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது. உலகின் தலை சிறந்த மேதைகளில் இளையராஜாவும் இருப்பார். 83 வயதிலும் பாடல் எழுதி இசை அமைத்து பாடி உள்ளார்.


    தமிழ் சினிமாவில் அவர் இருக்கும் இந்த கால கட்டத்தில் நானும் உள்ளேன் என்பதை பாக்கியமாக நினைக்கிறேன். இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளையராஜாவுக்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இசையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.

    அற்புதமான வாழ்வியலை கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர் அவர். காலத்திற்கும் நாம் படித்து கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா.

    கதாநாயகனாக நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது. காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள். விடுதலை பாகம்-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் பங்களிப்பில் ஒரு படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.


    கங்குவா திரைப்படம் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு எளிய ரசிகனாக குடும்பத்துடன் சென்று பார்த்தேன். 4 பேர் சொல்லும் எதிர்மறை கருத்துக்களை பார்க்க வேண்டாம். நிறைய பேர் கூறும் நல்ல கருத்துக்களை பார்க்க வேண்டும்.

    கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்கள். அந்த எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.

    எதிர்மறை விமர்சனம் செய்தால்தான் வரவேற்கப்படுகிறது என நினைத்து சிலர் தன்னை பிரபலப்படுத்தி கொள்ள காமிரா முன்பு எதிர்மறை விமர்சனத்தை செய்து வருகின்றனர்.

    தனுஷ், நயன்தாரா விவகாரத்தை நான் பார்க்க வில்லை. அது இரண்டு பேருக்கும் உட்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
    • காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    பிரபல நகைச்சுவை நடிகர் சூரி சினிமா துறை மட்டுமின்றி உணவகம் உள்ளிட்ட தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த ஊரான மதுரையில் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான உணவகங்கள் முக்கிய சந்திப்பு பகுதிகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ்லைன், திருநகர் மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

    இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார்.

    அதில் நடிகர் சூரியின் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 24.06.2022 அன்று தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

    பொதுப்பணித் துறையினரால் இந்த உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உணவக நிர்வாகத்தினர் அருகில் அமைந்துள்ள செவிலியர் விடுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக விதிமுறைகளை மீறி 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.

    கழிவு நீர் தேங்கும் செப்டிக் டேங்குகளின் மேற்பரப்பில் அமர்ந்து காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் தொற்று நோயை உண்டாக்கும் பெருச்சாளிகள், கரப்பான் திரிகின்றன.

    செவிலியர் விடுதிக்கு காற்றோட்டம், சூரிய ஒளி வரும் விதமாக அமைக்கப்பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவக நிர்வாகத்தினர் மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்.

    எனவே செவிலியர்கள் ஜன்னலை கூட திறக்க முடியாமல் எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர். அத்துடன் இந்த உணவகத்தின் அருகில்தான் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது.

    இவ்வாறு கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் ஏற்படும் நோய் தொற்றின் தீவிரம் பற்றி தெரியாமலேயே தினமும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவர்கள் உடன் தங்கியிருப்பவர்கள் இங்கு உணவு வகைகளை வாங்குகிறார்கள்.

    இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணித் துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் உணவகத்தில் அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சூரிக்கு சொந்தமான உணவக நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த புகார் மனு காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×