என் மலர்
நீங்கள் தேடியது "Actor Vishal"
- மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகரசபை முன்னாள் தலைவர் ஜனகராஜ், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
- மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது.
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மேடையில் திடீரென அவர் மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
முன்னதாக கடந்த ஜனவரியில் மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது. இதனால் அவரின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அவர் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.
- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.
- 'உண்மையை சொல்ல வேண்டுமானால் கண்டிப்பாக 2026- ல் அரசியலுக்கு வருவேன்"..
நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்த பாடல் அமைந்தது. ரசிகர்களிடம் இந்த பாடல் வரவேற்பு பெற்றது.

இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி ரத்னம் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் "ரத்னம்" பட பிரமோஷன் பணிகளில் விஷால் ஈடுபட்டு உள்ளார். தற்போது ஒரு பேட்டியின் போது விஷால் கூறியதாவது :-
எனது சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகள் தற்போது நிறைவு செய்து உள்ளேன். திரும்பி பார்க்கும் போது எனக்கே இது பிரமிப்பாக உள்ளது.' ரத்னம்' படத்தில் இயக்குனர் ஹரி சொன்ன விஷயம் ஒன்னு தான். இந்த படத்தை நான் 'பிரேக் ' பண்ணி காட்டுகிறேன். வித்தியாசமான கதா பாத்திரம் மக்களிடம் வெற்றி பெறும் என சொன்னார்.
ஷூட்டிங் போது நான் சாப்பிடும் உணவு தான் எல்லோரும் சாப்பிடனும். நான் வெட்ஜ் என்ற பெயரில் கருவாடுகுழம்பு, முட்டை போட்டால் அவ்வளவு தான் சொன்னேன். அண்ணே எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என அரசியலில் குதியுங்கள் என அனைவரும் சொல்லி விட்டனர்.

பிஜேபி சமீப காலமாக எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அவரது பொறுமை எனக்கு பிடித்து உள்ளது.
பிஜேபி கட்சியில் சேர போகிறாயா என கேட்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமானால் கண்டிப்பாக 2026- ல் அரசியலுக்கு வருவேன்". என விஷால் கூறினார். இதன் மூலம் வருகின்ற 2026 சட்ட மன்ற தேர்தலில் விஷால் அரசியலில் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.
- தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், என்னிடம் வண்டியில்லை.
நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 26- ந்தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் "ரத்னம்" பட பிரமோஷன் பணிகளில் விஷால் ஈடுபட்டு உள்ளார். சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஷால் கூறியதாவது :-
பாராளுமன்ற தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் வண்டியில்லை. அப்பா, அம்மாவிடம் வண்டி உள்ளது. என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன்.

நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவரது தன்னம்பிக்கை பிடிக்கும். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷன் மோசமாக உள்ளது.
'டிராபிக் ஜாம்' இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதற்காக சைக்கிளில் சென்றேன் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.
எல்லோரும் நல்லது செய்யவே அரசியலுக்கு வருகின்றனர்.நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறோம்.

தமிழ்நாட்டிற்கு மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம்.
திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் நலப்பணிகள். மக்களுக்கு ஏதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்.பிக்க்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். என்ன கொடுமை இது? "என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரூ.21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை.
- சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கூறப்பட்டது.
நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. விஷால் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை என லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் 2021ல் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, வரும் ஜூன் 28ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின்போது, லைகாவிற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பு கூறினாலும், ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என லைகா தரப்பில் கூறப்பட்டது.
- இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆலோசிக்க வேண்டும்.
- தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது முறைகேடு.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை.
இதனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
- நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை.
- நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்டேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியவை என விஷாயல் தெரிவித்துள்ளார்.
உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள், தொழிலுக்கு உழைக்கு நிறைய இருக்கிறது என நடிகர் விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.
- சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
- தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.
சென்னை:
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டலை அறிய கமிட்டி அமைக்கப்படும்.
தமிழ் சினிமாவில் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல் நடக்கிறதா இல்லையா என்று என்னால் செல்ல முடியாது.
சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20% பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80% பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை, செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
- மதகஜராஜா திரைப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- விஷாலின் தோற்றமே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
சுந்தர்.சி 2013 ஆம் ஆண்டு 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற மை டியர் லவ்வர் பாடல் 12 வருடங்கள் முன்பே மிக வைரலானது. இப்பாடலை விஷால் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது. இருப்பினும் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சென்னையில் சமீபத்தில் நடைப்பெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். சுந்தர் சி, விஜய் ஆண்டனி, விஷால், குஷ்பு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விஷாலின் தோற்றமே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து பேசிய விஷால் குரல் நடுக்கத்துடன், பேச்சில் தடுமாற்றம் மற்றும் கையில் மைக்கை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டே பேசியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த காணொளி இணையத்தில் வைரலானது. விஷாலின் மேல் உள்ள அக்கறையில் ரசிகர்கள் அனைவரும் சீக்கிரம் குணமாகி வாருங்கள். என பதிவிட்டு வந்தனர். சிலர் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் இப்படி ஆயிற்று என பல செய்திகளை பரப்பினர்.
இதைதொடர்ந்து, விஷால் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அவருக்கு அதிகப்படியான வைரல் காய்ச்சல் ஏற்ப்பட்டதால்தான் இவ்வாறு ஆனதற்கு காரணம் என டாக்டர் சான்றிதழுடன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்தன.
ஆனால் இதற்கு விஷாலில் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், " விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார்.
ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என 2 முக்கிய சங்கங்களிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால்.
சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளியாகின. ரஜினியும் கமலும் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அரசியலுக்குள் நுழைந்தார்.
ஆனால் கடைசி நேர குளறுபடிகளால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதபடி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரே காரணம் என்று சொல்லப்பட்டதால் விஷாலுக்கும் அ.தி.மு.கவுக்குமான பனிப்போர் தொடங்கியது.
இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு சொந்தமாக நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அப்போது டுவிட்டரில் விஷால் வெளியிட்ட ஒரு பதிவு, அ.தி.மு.க.வைச் சீண்டுவதுபோல அமைந்தது.
அவர் வெளியிட்டு இருந்த பதிவில், “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இது அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விஷால் கருத்துக்கு இன்று வெளியான அ.தி.மு.க நாளேடான நமது அம்மா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘நியூஸ் ஜெ’ தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிற வேளையில், ஒரு ‘விஷமப்பயல்’ மட்டும் வாழ்த்துக்கு பதிலாக வன்மத்தை கக்குகிறது. காசு ஏது என்று காழ்ப்புணர்ச்சி பேசுகிறது.
இப்ப மட்டுமா?... வெகு நாளாகவே குறிப்பாக அம்மாவின் மறைவுக்குப் பிறகு துரோகியின் தூண்டுதலின் பேரில், கழகத்தை தொடர்ந்து பழிக்கிற துஷ்டனாகிவிட்ட “அந்த தோல்விப்பட நடிகர்” கணக்கு கேட்க வேண்டிய இடம், “63 லட்சம் ரூபாய் சொத்து கணக்கு காட்டிவிட்டு, தொலைக்காட்சி, பத்திரிகை நடத்துவதோடு, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியும், ஊரெங்கும் கூட்டம் நடத்துகிறேன் என்று மாதம் 10 கோடி ரூபாயை செலவு செய்யும் அந்த மாபியா தலைவனிடம் தானே...”
அதைவிடுத்து, ஏறத்தாழ 2 கோடி தொண்டர்களை கொண்ட இமயப் பேரியக்கத்திடம்... ஆறாம் முறையாய் தமிழகத்தை ஆட்சி செய்யும் கழகத்திடம்... தொலைக்காட்சி தொடங்க பணம் ஏது என்று டுவிட்டரிலே, பதிவு போட்டு தனது நமைச்சலை வெளிப்படுத்துவது வெட்கக்கேடல்லவா?...
சரி அதெல்லாம் போகட்டும்... நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு கோடம்பாக்கமே உன்னை கொலை வெறியில் தேடுகிறபோது, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை...
போ... போ... வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு....
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. #NamadhuAmma #ADMK #Vishal
