search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adathoda syrup"

    • கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது.
    • நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும்.

    ஆடாதொடா எல்லாருடங்களிலும் எளிதாக வளரக்கூடிய செடி. பல்வேறு செடிகளை தின்னும் ஆடுகள், இதை தொட்டுக்கூட பார்க்காது. ஆடு தொடாது என்பதால் இதற்கு ஆடாதொடா என்று பெயர். ஆனால் இதனை பெரும்பாலானவர்கள் 'ஆடாதொடை' என்று அழைப்பார்கள். இந்த செடி ஈட்டி வடிவ இலைகளை கொண்டிருக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும்.


    ஆடாதொடா கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது. குரலை மெருகேற்றுகிறது. அதனால் 'ஆடாதொடா இலையும், ஐந்து மிளகும் பாடாத வாய் எல்லாம் பாடும்' என்ற முதுமொழி உருவாகி விட்டது.

    இதன் இலை கசப்பு தன்மையுடையது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் அது நுரையீரலின் நுண்ணிய காற்றறைகளில் சிக்கி இருக்கும் கபத்தைக்கூட வெளியேற்றிவிடும். நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும்.

    நீடித்த இருமல், நுரையீரலில் கபம் சேர்வதால் உண்டாகும் இருமல், தொண்டைகட்டு, கிருமி தொற்றுக்களினால் உருவாகும் சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு ஆடாதொடா சிறந்த மருந்தாகும்.

    காச நோயாளிகள் இருமும்போது சளியில் ரத்தம் காணப்படும். அவர்களுக்கு உடல் சோர்வுற்று மூச்சிரைப்பு ஏற்பட்டு மாலை நேரங்களில் காய்ச்சலும் உண்டாகும்.

    இதற்கு பத்து ஆடாதொடா இலைகளை அரைத்து, ஆவியில் வேகவைத்து, சற்று ஆறிய பின்பு சாறு பிழிந்தெடுக்கவேண்டும். அதில் 10 மி.லி சாறு எடுத்து, 4 தேக்கரண்டி திப்பிலி பொடி கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.

    தேவையான பொருட்கள்

    ஆடாதொடா இலை- 500 கிராம்

    சர்க்கரை- 300 கிராம்

    சுக்கு- 5 கிராம்

    மிளகு- 5 கிராம்

    திப்பிலி- 5 கிராம்

    ஜாதிக்காய்- 5 கிராம்

    தண்ணீர்- 200 மி.லி


    செய்முறை:

    ஆடாதொடா இலையை அரைத்து சிறிது நீர் கலந்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு, சர்க்கரையை கொட்டி பாகு காய்ச்சவும். பதம் வருவதற்கு சற்று முன்பாகவே ஆடாதொடா சாற்றை சேர்த்து, சிறுதீயில் கம்பி பதம் வரும் வரை வைத்திருக்கவும்.

    பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, ஜாதிக்காய் போன்றவைகளை பொடித்து தூளாக்க வேண்டும். அதன்பிறகு தீயை அணைத்து விட்டு அந்த கலவையில் இந்த பொடிகளை சேர்க்க வேண்டும்.

    ஆறிய பின்னர் தேன் கலந்து ஈரப்பதம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுளலாம்.


    ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம். சளி, இருமல், மாதவிடாய் சமயம் உண்டாகும் அதிக ரத்த போக்கிற்கும் இது சிறந்த மருந்து.

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நீடித்த சளி, இருமல் தோன்றினால் இதை தினம் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுங்கள். அவர்கள் அந்த அவஸ்தையில் இருந்து விடுபட்டு விடுவார்கள்.

    ×