என் மலர்
நீங்கள் தேடியது "Adolescent Arrest"
- இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
- புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குணால் (வயது 22). இவர் அலங்கியத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார்.இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் புகார் செய்தனர்.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
- உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.
உடுமலை:
உடுமலைஅருகே உள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 49 ).இவர் ஐஸ்வர்யா நகர் சாலையில் நின்ற போது ஏரி பாளையத்தைச் சேர்ந்த அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
- மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வரும் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு ஆய்வு மேற்கொண்டதில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி மது பாட்டில்கள் 10-ம், மது விற்பனை செய்த ரொக்கம் ரூ. 750-ம் பறிமுதல் செய்யப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.