என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aghori"

    • மகா கும்பமேளாவுக்கு சென்ற உறவினர்கள், எங்கள் தந்தை போல் இருக்கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
    • என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்றபோது நான் கருவுற்றிருந்தேன்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் புலி பகுதியை சேர்ந்தவர் கங்காசாகர் யாதவ் (65).

    கடந்த 27 ஆண்டுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கங்காசாகரை அவரது குடும்பத்தினர் கண்டு பிடித்துள்ளனர். அவர் தற்போது அகோரி சாதுவாக சாத்வியுடன் வாழ்ந்து வருகிறார்.

    அவருக்கு தன்வா தேவி என்ற மனைவி, விமலேஷ், கமலேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    இதுகுறித்து விமலேஷ் கூறியதாவது:-

    மகா கும்பமேளாவுக்கு சென்ற உறவினர்கள், எங்கள் தந்தை போல் இருக்கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அவரது புகைப்படத்தையும் அனுப்பினர். பின்னர் அம்மா, தம்பி மற்றும் உறவினர்களுடன் கும்பமேளா பகுதிக்கு சென்று தேடினோம். ஒரு வழியாக அவரை கண்டு பிடித்தோம். அவர்தான் எங்கள் தந்தை என்பதை அம்மாவும் உறுதியாக கூறுகிறார். ஆனால், வீட்டுக்கு அழைத்தால் வர மறுக்கிறார். எங்களை அடையாளம் தெரியாதது போல் நடந்து கொள்கிறார். மகா கும்பமேளா முடிந்த பிறகு எங்கள் தந்தையை மீட்க, மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதுகுறித்து தன்பாத் போலீஸ் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

    தற்போது கங்காசாகர் அகோரி சாதுவாக வாழ்கிறார். அவருடைய பெயர் பாபா ராஜ்குமார் அகோரி என்கிறார். மனைவி தன்வா தேவி உட்பட உறவினர்கள் யாரையும் தெரியாது என்கிறார்.

    ஆனால் அவருடைய நீள பற்கள், நெற்றியில் தழும்பு போன்ற அடையாளங்களை வைத்து கங்காசாகர் தான் என்று உறவினர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதுகுறித்து தன்வா தேவி கூறியதாவது:-

    என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்றபோது நான் கருவுற்றிருந்தேன். அப்போது மூத்த மகனுக்கு 2 வயதுதான். அவரைப் பார்த்ததும் நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஆனால், அவர் தெரியாதது போல் நடிக்கிறார் என்றார். இந்நிலையில், தன்வா தேவி, மகன்கள், உறவினர்கள் பலர் மகா கும்பமேளா பகுதியிலேயே முகாம்களில் தங்கி உள்ளனர். அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.

    டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் 'அகோரி' படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டார். #Aghori #AghoriTeaser #Vishal
    ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து 'அகோரி' என்ற படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே அகோரியாக நடிக்கிறார்.

    நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்க, வில்லனாக சகுல்லா மதுபாபு நடிக்கிறார். மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன் உள்ளிட் பலரும் நடித்துள்ளனர். 



    சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி படம் கதை உருவாகி இருக்கிறது. 'அகோரி' படத்தின் டீசரை நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் வெளியிட்டார். படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Aghori #AghoriTeaser #Vishal

    திருச்சி அருகே மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி மக்களிடையே வியப்பினை ஏற்படுத்தியது. #Aghori
    திருவெறும்பூர்:

    இறைவனுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்டதாக கூறுபவர்கள்தான் அகோரிகள். நீண்ட தலைமுடி, உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்ணை குழைத்து பூசிக் கொள்வது, தியான நிலை என்று வாழும் அகோரிகள் பெரும்பாலும் இமாலய மலை பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி, நேபாளம் ஆகிய இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவில் திரளாக கலந்துகொள்வார்கள். பெரும்பாலும் மயான பகுதிகளில் வாழ்வதையே கடமையாகவும் கொண்டுள்ளனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது இஷ்ட தெய்வ கோவில்களை கட்டி பூஜை நடத்தி வருகிறார்கள்.

    அதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி பூஜை, வளர்பிறை அஷ்டமி பூஜை, தேய் பிறை அஷ்டமி பூஜை ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவில் நிர்வாகியான அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் நடைபெற்றது. முன்னதாக மேரியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

    இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அகோரிகள்.

    இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் டம்ரா மேளம் முழங்க, சங்கு ஊதி அகோரி பூஜை நடத்தினர்.

    இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது. இது அகோரிகளின் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

    இதையடுத்து மேரியின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அடக்கம் செய்தனர். மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி பொதுமக்களிடையே வியப்பினை ஏற்படுத்தியது.   #Aghori



    பாரதியாக நடித்து பிரபலமான சாயாஜி ஷிண்டே, தற்போது அகோரி படத்தில் சிவனடியாராக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார். #Aghori
    பாரதியாக நடித்து பிரபலம் ஆனவர் சாயாஜி ஷிண்டே. இவரது வித்தியாசமான நடிப்பில் ‘அகோரி’ என்கிற படம் தயாராகி வருகிறது. சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

    மேலும் கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன. இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது, “தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டபோது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. 

    இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன். நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
    ×