என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airtel"

    • ஏர்டெல் நிறுவனம் இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • பயனர்கள் டேட்டா கட்டுப்பாடின்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் துவங்கிவிட்டது. நாடு முழுக்க கிரிக்கெட் ஆர்வம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் பயனர் தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிரீபெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.

    புதிய சலுகைகள் விலை ரூ. 99 மற்றும் ரூ. 49 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஏர்டெல் ரூ. 99 சலுகையில் இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எவ்வித டேட்டா கட்டுப்பாடுகளும் இன்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும். ரூ. 49 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இரு சலுகைகளிலும் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. ஏர்டெல் ரூ. 49 சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும்.

    மொபைல் டேட்டா சலுகைகள் மட்டுமின்றி, ஏர்டெல் டி.டி.ஹெச். ஸ்டார் நெட்வொர்க் உடன் கூட்டணி அமைத்து கிரிக்கெட் பயனர்களுக்காக பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் எளிதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும். 

    • ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
    • ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

    அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.

    ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும். 

    • போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.
    • குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்

    போக்கோ நிறுவனம் ஏர்டெல் உடன் கூட்டணி அமைத்து போக்கோ C51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இந்த கூட்டணியை நீட்டிக்கும் வகையில், ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதனை போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டான்டன் எக்ஸ் பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி ஏர்டெல் கூட்டணியில் உருவான புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ நியோ சீரிசில் இடம்பெற்று இருக்குமா அல்லது போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.



    அதில், இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனின் ஏர்டெல் வெர்ஷனாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். புதிய சாதனம் பற்றி வேறு எந்த தகவலும் குறிப்பிடாமல், அது இந்திய சந்தையில் அறிமுகமாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த சாதனம் போக்கோ C சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் சேவைகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் லாக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் தவிர போக்கோ இந்தியா நிறுவனம் தனது போக்கோ X6 நியோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் போக்கோ X6 மற்றும் போக்கோ X6 ப்ரோ மாடல்களுடன் இணையும். 

    • இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.
    • புதிய ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி மற்றும் மூன்று நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் போக்கோ C51 ஸ்மார்ட்போன் ஏர்டெல் பிரத்யேக எடிஷனாக ரூ. 5 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.

     


    தற்போது போக்கோ அறிவித்து இருக்கும் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனின் ஏர்டெல் எடிஷன் மாடல் மார்ச் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் சேவையை பயன்படுத்தாதவர்களுக்கு சிம் கார்டு வீட்டிலேயே டெலிவரி செய்யும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ M6 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்டிக் பிளாக், ஒரியன் புளூ மற்றும் போலாரிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய போக்கோ M6 5ஜி ஏர்டெல் எடிஷனின் விலை ரூ. 8 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. 

    • சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

    ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், மாஸ்டர்கார்டு மற்றும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கான்டாக்ட்லெஸ் பேமண்ட் சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர், ஏர்டெல் தேங்ஸ் செயலியில் டிஜிட்டல் முறையில் கணக்கை துவங்க வேண்டும். பிறகு, அதே செயலியில் தங்களது கணக்கை லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனை செய்துமுடிக்க ஒரு நிமிடமே ஆகும்.

     


    ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட் ஆனதும், பயனர்கள் டேப் அன்ட் பே (tap and pay) வசதி கொண்ட பாயின்ட் ஆஃப் சேல் (point of sale) மெஷின்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ வைத்து பேமண்ட் செய்துவிட முடியும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ரூ. 1-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை செலுத்த முடியும்.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள என்.எஃப்.சி. (NFC) சிப் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்-இல் இயங்குகிறது. என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் பயனர்கள் கான்டாக்ட்லெஸ் பேமண்ட்களை ரிடெயில் ஸ்டோர், பி.ஒ.எஸ். (POS) டெர்மினல் மற்றும் இதர பேமண்ட் முறைகளில் மிக எளிதாக பணம் செலுத்த முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.85 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், 130 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, ஸ்டிரெஸ் மானிட்டர் அம்சம், SpO2 மானிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரே, புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    • சலுகைகளின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
    • அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரை ஒட்டி சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பழைய சலுகைகள் விலை மாற்றப்பட்டு, அவற்றின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

    ஏர்டெல் ரூ. 49 மற்றும் ரூ. 99 சலுகைகளின் விலை முறையே ரூ. 39 மற்றும் ரூ. 79 என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த இரு சலுகைகளும் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடருக்காக மாற்றப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் பயனர்களுக்கு தடையற்ற கனெக்டிவிட்டி வழங்கும்.

    ஏர்டெல் ரூ. 39 விலை சலுகையில் 20 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். ஏர்டெல் ரூ. 49 விலை சலுகையில் வின்க் பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ. 79 சலுகையில் அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தமாக 40 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாகவும், இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.
    • தேர்தல் முடிந்த உடன் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இறுதிக்கட்டமாக ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கவே முடியாதது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனம் அதிக பயன் பெறும் எனவும், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
    • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

    2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


    இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

    வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    • ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை இணைந்துள்ளது.
    • புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகும்.

    முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்தில் 26.87 லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதுவே, ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை மட்டுமே இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 1,199.28 மில்லியனிலிருந்து 24, ஏப்ரல் இறுதியில் 1,201.22 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.16 சதவீதமாக உள்ளது.

    நகர்ப்புற தொலைபேசி சந்தா மார்ச் இறுதியில் 665.38 மில்லியனில் இருந்து ஏப்ரல் இறுதியில் 664.89 மில்லியனாக குறைந்துள்ளது.

    இருப்பினும் அதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா 533.90 மில்லியனில் இருந்து 536.33 மில்லியனாக அதிகரித்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொலைபேசி சந்தாக்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் முறையே 0.07 சதவீதம் மற்றும் 0.45 சதவீதமாக இருந்தது.

    எவ்வாறாயினும், வோடபோன் ஐடியா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடுதலா 7.35 லட்ச சந்தாதாரர்களை இழந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகவும், ஏர்டெல் 33.12 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா 18.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் மாத இறுதியில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 55.35 சதவீதம் மற்றும் 44.65 சதவீதம் ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம்.
    • டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.279 விலையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஏர்டெல் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்-பிலும் வழங்கப்படுகிறது.

    இது ஒரு வித்தியாசமான திட்டமாகும், ஏனெனில் இது குறைந்த செலவில் கிடைக்கும். ஆனால் மற்ற வகையான நன்மைகளை நீக்குகிறது.

    சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.395 பிளானை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியது. இப்போது ரூ.279 விலையில் கிடைக்கும் திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஏர்டெல் பயனர்களுக்கு குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் இந்த பிளான், அதிக டேட்டாவை வழங்கவில்லை. பயனர்கள் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.279 திட்டத்தில் 2GB டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் 600 SMS என்று மொத்தமாக 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.6.2 ஆகும்.

    இருப்பினும், நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம். இவற்றின் விலை 1 நாளுக்கு ரூ. 19 இல் தொடங்குகிறது. டேட்டா வவுச்சர்களைப் பெற நீங்கள் தொடர்ந்து அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும்.

    டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். வரம்பற்ற வாய்ஸ் கால் இருப்பதால், அழைப்பின் பலன் எப்போதும் நாள் முடிவில் உதவியாக இருக்கும்.

    இதே சலுகையில் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் அப்போலோ 24/7, இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் அடங்கும்.

    • 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    2024ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகளை பிராண்ட் பைனான்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ளது.

    அதில் 2023 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த டாடா நிறுவனமே இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை விட 9% வளர்ச்சியுடன் 28.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதலிடத்தை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.

    கடந்தாண்டை விட 9% வளர்ச்சி மற்றும் 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    கடந்தாண்டை விட 38% அபார வளர்ச்சியுடன் எச்.டி.எப்.சி குழுமம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    6-ம் இடத்தில் எஸ்.பி.ஐ.யும், 7-ம் இடத்தில் ஏர்டெல்லும் 8-ம் இடத்தில் எச்.சி.எல். டெக்னாலஜியும் 9-ம் இடத்தில் லார்சன் & டர்போ நிறுவனமும் 10-ம் இடத்தில் மகேந்திரா நிறுவனமும் உள்ளது.

    • 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • 2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது.

    புதுடெல்லி:

    ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

     

    மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரத் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிசம்பர் 2019-ல் கட்டணங்களை உயர்த்தின. 2016-ல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறை உயர்த்தியது.

    2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது. அதே நேரத்தில் 2021 உயர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நான்கு காலாண்டுகளில் ஏர்டெல் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தில் ரூ. 30 மற்றும் 36 உயர்வை வழங்குகிறது.

    கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×