என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma canteen"

    • எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
    • மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.

    நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

    அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

    • சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
    • சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்

    32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது .

    இந்நிலையில், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

    அதில், சிக்கிம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களால் நடத்தப்படும் 'அம்மா உணவகம்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

    பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும்

    * அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாயை 9,000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார். #AmmaCanteens #MinisterSPVelumani
    சென்னை:

    தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அடித்தட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. 

    இந்த உணவகங்களில் காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்குப் பொங்கல் வழங்கப்பட்டது. மதிய வேளையில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை  சாதம், கீரை சாதம் என அனைத்தும் தலா ரூ.5 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இரண்டு சப்பாத்தி 3 ரூபாய் தான். உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருப்பதுடன், விலை குறைவாகவும் கிடைத்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

    இந்நிலையில், சமீப காலமாக அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. உணவகங்களில் கூட்டமும் குறையத் தொடங்கியது.

    இதையடுத்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். உணவுகளின் தரத்தை சோதனை செய்த அவர், தரமான உணவுகளை வழங்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த சோதனைக்குப் பிறகு, சிந்தாதிரிப் பேட்டை அம்மா உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    தமழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் ஒப்புதல்  கிடைத்ததும் உணவகங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். #AmmaCanteens  #MinisterSPVelumani
    ×