என் மலர்
நீங்கள் தேடியது "Andhra Rail Accident"
- துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விஜயநகர மாவட்டம், கண்டகப்பள்ளி ரெயில் நிலைய பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது அவ்வழித்தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மத்திய அரசும், ரெயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் விபத்து குறித்து விரிவான உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் அலர்ட் சிஸ்டம் ஏன் செயல்படவில்லை, சிக்னலில்லிங் ஏன் தோல்வியடைந்தது.
தகவல் தொடர்பு அமைப்பு எவ்வாறு தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.
விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆதரவு, பிரார்த்தனைகளும் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
- ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
- ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.
திருப்பதி:
ஆந்திரப் மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா-சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரெயில், விசாகப்பட்டினம் பலாசா ரெயிலில் பின்னால் இருந்து மோதியது.
இதில் 14 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த கோரமான ரெயில் விபத்து தென்னிந்தியாவையே உலுக்கியது.
இந்த நிலையில் இந்திய ரெயில்வே செய்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் விபத்து ஏற்படுத்திய ஒரு ரெயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.
"நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம். ஆந்திர ரெயில் விபத்துக்கு காரணமான 2 ஊழியர்களும் அதில் பலியாகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.