என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anil Deshmukh"

    • அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
    • சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை மந்திரியான அனில் தேஷ்முக் 2019-ம் ஆண்டில் பொறுப்பேற்றார். அப்போது மது பார்களில் இருந்து மாதந்தோறும் பணம் வசூலித்து தரும்படி அனில் தேஷ்முக் கூறியதாக, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அப்போதைய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதினார்.

    இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பண மோசடி வழக்கு பதிவுசெய்த அமலாக்கத் துறையினர், மந்திரி அனில் தேஷ்முக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    மேலும், அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஜாமீன் வழங்க கோரி மும்பை ஐகோர்ட்டில் கடந்த டிச.12-ல் அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பு எதிர்ப்பு தெரிவித்து. எனினும் சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மும்பை ஆர்தர் ரோடு சிறையிலிருந்து அனில் தேஷ்முக் இன்று மாலை வெளியே வந்தார். தேசியவாத காங்கிரஸ்

    கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சரும், என்.சி.பி (எஸ்.பி.) தலைவருமான அனில் தேஷ்முக் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாக்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது காரின் மீது கற்கள் வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேஷ்முக் கட்டோல் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் பெல்பாட்டா அருகே தேஷ்முக்கின் கார் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசினர். தாக்குதலின் போது காயம் அடைந்த தேஷ்முக் உடனடியாக கடோல் சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    "இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியது. தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர்," என்று காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதா கூறினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இன்று பிரச்சாரம் நிறைவு பெற்றது. தற்போது தாக்குதலுக்கு ஆளான தேஷ்முக்கின் மகன் சலில் தேஷ்முக், கடோல் சட்டமன்றத் தொகுதியில் என்சிபி (சரத்சந்திர பவார்) சார்பில் பாஜகவின் சரண்சிங் தாக்கூரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை.
    • மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை மந்திரியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் மீது நேற்றிரவு கடோல்-ஜலால்கேடா சாலையில் காரில் சென்றபோது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞசய் ராவத் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை. தேவேந்திர பட்நாவிஸ் தற்போது உள்துறை மந்திரியாக உள்ளார்.

    அவருடைய நகரில் முன்னாள் உள்துறை மந்திரியை கொல்ல சதி நடைபெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இதற்கு முதலில் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இந்த 2 வருடத்தில் மகாராஷ்டிராவின் சட்ட ஒழுங்கை தேவேந்திர பட்நாவிஸ் கெடுத்துவிட்டார். மும்பை தெருக்களில் பாபா சித்திக் போன்றோர் கொல்லப்பட்டதுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    இந்த அடிப்படையில் முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தாக்கப்பட்டு, கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இதற்கு பட்நாவிஸ், அவரே முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    அனில் தேஷ்முக்கின் விசாரணைக் காவலை நீட்டிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    மும்பை:

    பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை விசாரணைக் காவலில் எடுத்து விசாரித்த அதிகாரிகள், நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அனில் தேஷ் முக்கிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. 

    இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த விடுமுறைக்கால சிறப்பு அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்ததுடன், அனில் தேஷ்முக்கை நவம்பர் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. 

    தேஷ்முக்குடன் அவரது உதவியாளர்கள் குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

    அனில் தேஷ்முக்கின் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள மதுபார்கள், ஹோட்டல்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்து தரக் கோரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்துவதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார். 

    ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை தரப்பில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் தேஷ்முக்கிடம் கடந்த திங்கட்கிழமை 12 மணி நேரம் விசாரணை நடத்தி நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் அவரை நவம்பர் 6ம் தேதி வரை விசாரணைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணைக் காவல் முடிந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அனில் தேஷ் முக்கிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. 

    தேஷ்முக்குடன் அவரது உதவியாளர்கள் குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
    பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அனில் தேஷ்முக் அம்மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

    மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இதில், அப்போதைய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்குமாறு மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

    இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பதவியை ராஜினமா செய்த அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு சொந்தமான 4.20 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    அமலாக்கத்துறை

    பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே, தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்தது.

    இதற்கிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே உதவியுடன், மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து 4.70 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதில் 4.18 கோடி ரூபாயை போலி நிறுவனத்தின் பெயரில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அனில் தேஷ்முக் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 

    பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

    சம்மனை ரத்து செய்யக் கோரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் தேஷ்முக் நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் நேற்று இரவு 12 மணியளவில் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார்.

    ×