என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » approved
நீங்கள் தேடியது "approved"
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. #UnionCabinet #DearnessAllowance
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயருகிறது.
கடந்த ஜனவரி 1 முதல், முன்தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.
7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயருகிறது.
கடந்த ஜனவரி 1 முதல், முன்தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.
7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
×
X