என் மலர்
நீங்கள் தேடியது "AR Murugadoss"
- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர்.
- நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா ‘ஓவர் டேக்' செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, திருமணத்துக்கு பிறகும் படங்களில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். அஜித்தின் 'குட் பேட் அக்லி' உள்பட பல படங்களில் நடிக்கிறார். மலையாளத்திலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

அதேபோல சீனியர் நடிகையான திரிஷா கமல்ஹாசனின் 'தக்லைப்', அஜித்தின் 'விடாமுயற்சி' படங்களில் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார்.
இளம் நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு நயன்தாராவும், திரிஷாவும் படங்களில் நடித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கி வரும் இருவருமே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.
ஆனால் இவர்களையே கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா முந்திவிட்டது தான் தற்போது சினிமாவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறாராம். பின்னர் பேச்சுவார்த்தையில் ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா 'ஓவர் டேக்' செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரை உலகின் பிரபல நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படத்திலும் ருக்மணி வசந்த் கதாநாயகியாக இணைந்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். தற்போது தென்னிந்திய படங்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த மொழி படங்களில் நடித்தாலும் அதில் சிறப்பாக பேச வேண்டும் என முயற்சி செய்கிறேன். எனக்கு சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன். ஆனால் இபபோதுள்ள சூழ்நிலையில் அது தேவைப்படாது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 படத்தில் முதலில் மிருணாள் தாக்கூர் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்க முடியாததால் ருக்மணி வசந்த் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.
- ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும்
அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும் பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அஃலி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.
அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5.49 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பு அல்லது போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- SK23 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடிக்கிறார்.
- இப்படத்தில் பிஜு மேனன் இணைந்ததாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்பொழுது SK23 படத்தில் நடித்து வருகிறார்.
- சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்பொழுது SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.
மேலும் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவரை வாழ்த்தி வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். அதில் ஏ.ஆர் முருகதாஸ் ஆகஷன், கட் மற்றும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிடி.எஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.
- சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்று வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கந்தர் திரைப்பதில் இடம்பெற்றுள்ள 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலில் சல்மான் கான் மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிக்கந்தர் படத்தின் 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தப் பாடலை எழுதியவர் யாராக இருந்தாலும், அவரை உயிருடன் விடமாட்டோம். இந்தப் பாடலை எழுதியவரின் வாழ்க்கையை அடுத்த ஒரு மாதத்தில் முடித்துவிடுவோம் என்று மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்துள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பான மெசேஜ் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது.
அந்த கொலை மிரட்டல் மெசேஜில், சல்மான் கானுக்கு தைரியம் இருந்தால், அந்த பாடலாசிரியரை காப்பாற்ற வேண்டும் என்று சல்மான் கானுக்கு நேரடியாக சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.
ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் வித்யூத் ஜம்வல் வில்லனாக நடித்துள்ளார். திரைப்படத்தின் தலைப்பு மட்டும் கதைக்களத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அதே சமயம் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை இன்று காலை 11.07 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்ததையொட்டி படக்குழு இன்று மாலை 4.05 மணிக்கு படத்தின் டீசரை வெளியிட்டனர். டீசரின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹெல்மெட்டில், இரண்டு கொம்புகளைக் காண்கிறோம், அவை பிளாக் பக் வகை மான்களுடைய கொம்புகளை ஒத்திருக்கும்.
- எனது உயிரை எடுக்க பலர் முயற்சிப்பதாக நான் கேள்விப்பட்டேன்
பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.
படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அதில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்-ஐ சீண்டும் விதமாக சல்மான் கான் டீசரின் காட்சிகளும், வசனமும் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
டீசரில், கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்த கொலையாளிகள் நிறைந்த அறைக்குள் சல்மான் கான் நுழைவதைப் பார்க்கிறோம்.

அவர்களின் ஹெல்மெட்டில், இரண்டு கொம்புகளைக் காண்கிறோம், அவை பிளாக் பக் வகை மான்களுடைய கொம்புகளை ஒத்திருக்கும். இது சல்மானை சிக்கலில் சிக்க வைத்த புகழ்பெற்ற பிளாக்பக் மான் வேட்டை வழக்கை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். டீசரில் 00:38க்கு நிறுத்திப் பார்த்தால், ஹெல்மெட் அணிந்திருக்கும் கதாபாத்திரத்தை சல்மான் கான் சுட்டு வீழ்த்துகிறார்.
டீசரில், சல்மான் கான், " சுனா ஹை போஹோட் லாக் மேரே பீச்சே படே ஹைன், பாஸ் மேரே பீச்சே முட்னே கி டெர் ஹை (எனது உயிரை எடுக்கும் முயற்சியில் பலர் என்னை பின்தொடர்கிறார்கள் என நான் கேள்விப்பட்டேன், நான் திரும்பி நிற்கும் [அடிக்கும்] வரை காத்திருங்கள் என்று ஒரு டயலாக்கையும் கூறியுள்ளார். இது நேரடியாக லாரன்ஸ் பிஷ்னோய் -ஐ தாக்குவதாக உள்ளது என சல்மான் ரசிகர்கள் ஃ பயர் விட்டு வருகிறார்கள்.

சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார்.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது.
அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது. இதனைத்தொடர்ந்து சல்மானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
- ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளனர். அதனுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், மதராஸி படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது. படத்திற்கு மதராஸி என தலைப்பு வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் மிகவும் முரட்டு தோற்றத்தில் காணப்படுகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் மதராஸி திரைப்படத்தை பற்றி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " மதராஸி படத்தின் படப்பிடிப்பு பணிகள் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்டது. இன்னும் கிளைமாக்ஸ் பகுதி மட்டும் 12 நாள் படப்பிடிப்பு பண்ண வேண்டும். அனிருத் படத்திற்கான பின்னணி இசையை முடித்துவிட்டார்.
வட இந்தியர்கள் நம் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள், நினைக்கிறார்கள் என்பதை வைத்து தான் திரைப்படத்தின் தொடக்கம் அமைந்துள்ளது அதனால் மதராஸி என்ற தலைப்பை வைத்துள்ளோம். இப்படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனை அடுத்த கட்ட ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும். கஜினி திரைப்படத்தில் எப்படி மறதியோ, துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் மாதிரி இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித்தியாச கதாப்பாத்திரம். அதை இப்பொழுது என்னால் சொல்ல முடியாது" என கூறியுள்ளார்.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.