என் மலர்
நீங்கள் தேடியது "Arjun Ram Meghwal"
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது.
- அதை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.
ஜெய்ப்பூர்:
சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது. அதை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
1952, 1957, 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
இந்த முயற்சி தேசிய நலனுக்கானது. தேர்தல் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை தங்கள் ஒப்புதலை அளித்தன. அதன்பிறகு அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஒரே நேரத்தில் தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்ற குழுவால் பரிசீலிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
- மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
- மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அவர் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற ஒப்புதல் அளித்தார்.
அதன்படி புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய கலாசாரத்துறை இணை மந்திரியாக இருந்த அவருக்கு தற்போது சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
- மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.
என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஒரே நாடு தேர்தல் தொடர்பான மசோதா மக்களவையில் இன்று தாக்கல்.
- பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்பதல் வழங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம். அதற்கான மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும். ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும். மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன.
இருந்தபோதிலும் மக்களவை ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா எந்த விதத்திலும் மாநில அரசின் உரிமைகளில் குறுக்கிடாது என மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று மதியம் பேசும்போது இது தொடர்பாக அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:-
தேர்தல் மறுசீரமைப்புக்காக சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மசோதா தேர்தல் செயல்முறையை எளிதாக்கும் செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வழியாக அரசியலமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படாது. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பில் எந்த தலையீடும் இருக்காது. மாநில அதிகாரங்களில் நாங்கள் குறுக்கிடவில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.