search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armstrong Murdered"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
    • கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் இன்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம் எனவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.

    அவரது வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெரு பைக் செல்லும் அளவில் குறுகிய வழியாக உள்ளது. அந்த தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக ஒருவர் அவரை நோட்டமிடுகிறார். பின்னர் இன்னொரு பைக்கில் மற்றொருவர் வருகிறார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு பைக்கில் இரண்டு பேர் அந்த இடத்திற்கு வருகிறார்.

    அனைவரும் வந்ததும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்க ஆரமித்தனர். ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவர்கள் அவரை தாக்கியதை பார்த்து பின்னோக்கி சென்றனர். ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி காப்பாற்ற வரும் போது சொமேட்டோ டி சர்ட் அணிந்த ஒருவர் அவரை துரத்த ஆரமித்தார். உடனே அவர் பின்னோக்கி ஓடினார்.

    வேறு யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருக்க இன்னும் 3 பேர் சுற்றி இருந்த தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த வீடியோ தற்போது வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காகவே விசாரணை கைதி திருவேங்கடம் கொலை.
    • காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், சென்னை- மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?

    இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத் தான் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அதில் சரணடைந்த விசாரணை கைதியையும் காப்பாற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு தி.மு.க. ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு திறனற்றதாகி உள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.

    உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு தி.மு.க. நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டு உள்ள இத்துப்பாக்கிச் சூடு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக தி.மு.க. அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

    ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

    உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை.
    • மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

    வேலூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி வந்தார். ரெயில் மூலம் வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பண பலம், அதிகார பலத்தால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    கர்நாடக அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. அதைப் பற்றி எல்லாம் பேசுவது கிடையாது.

    தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தான் நாம் கேட்கிறோம்.

    தி.மு.க.க்கு கூட்டணி தான் முக்கியம். ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். இந்தியா கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. தமிழக முதலமைச்சர் காவிரி தண்ணீருக்காக எந்தவித குரலையும் கொடுக்கவில்லை.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்ற நபர் ஏற்கனவே சரண் அடைந்தவர். சரணடைந்தவரை அதிகாலையிலேயே வேக வேகமாக அழைத்துச்சென்றது ஊடகத்தின் மூலமாக பார்த்து தெரிந்து கொண்டேன்.

    அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்படி அழைத்துச் சென்றவரை கை விலங்கு போட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும்.

    மேலும் பாதுகாப்பாக சென்று இருக்க வேண்டும். மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

    ஏன் அவர் அவசர அவசரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

    இதில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இப்போது செய்யப்பட்ட என்கவுண்டர் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×